தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 7 ஆயிரத்து 817 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 8 ஆயிரத்து 183 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 8 ஆயிரத்திற்கும் குறைவாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 22 ஆயிரத்து 497 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 29 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது.


சென்னையில் மட்டும் இன்று கொரோனா வைரசால் 455 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற 36 மாவட்டங்களில் 7 ஆயிரத்து 362 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்றைய நிலவரப்படி, கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,316 ஆக குறைந்துள்ளது.


இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 17 ஆயிரத்து 26 நபர்கள் ஆண்கள் ஆவர். பெண்கள் மட்டும் 10 லட்சத்து 5 ஆயிரத்து 433 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.




கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 4 ஆயிரத்து 305 நபர்கள் ஆவர். பெண்கள் 3 ஆயிரத்து 512 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 ஆயிரத்து 43 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 21 ஆயிரத்து 928 ஆக உயர்ந்துள்ளது.


தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 182 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 282 நபர்கள் உயிரிழந்த நிலையில், இன்று 182 நபர்களாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று உயிரிழந்தவர்களில் 76 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், 106 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 197 ஆக உயர்ந்துள்ளது.




சென்னையில் மட்டும் கொரோனா வைரசால் 8 ஆயிரத்து 46 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 28 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் ஆவர்.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி குறைந்து வருவதையடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு விதிகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு இன்று அளித்துள்ளது. இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை முதல் பொதுப்போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


.மேலும் படிக்க : Madan Youtube Channel Blocked: மதனுடைய யூடியூப் பக்கத்தை முடக்கியது சைபர் பிரிவு!