திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கல்லரைப்பாடி ஊராட்சியில் ஊராட்சி தலைவராக உள்ள ஏழுமலை என்பவரை ஊராட்சி செயலாளர் வேல்முருகன் என்பவர் அவரது பட்டியலினத்தவர் என்னும் ஜாதிய பாகுபாட்டைச் சொல்லி இழிவாக நடத்தியதாகவும், ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டார். அதன்  பெயரில்  எழுந்த புகாரின் அடிப்படையில், அப்போது  இருந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியால்,  ஊராட்சி மன்றச் செயலாளர் வேல்முருகன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


இந்த சம்பவம் குறித்து தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தினர் ஆய்வு நடத்த கூறியதன் அடிப்படையில், இன்று கல்லரைப்பாடி கிராமத்தில் சஃபாய் கர்மச்சாரி, தேசிய ஆணைய தலைவர் எம். வெங்கடேசன் பாதிக்கப்பட்ட நபர் ஏழுமலை மற்றும் ஊராட்சியிடம் செயளாலர் வேல் முருகனிடமும் மற்றும் கிராம வார்டு உறுப்பினர்களிடமும் தனி தனியாக விசாரணை மேற்கொண்டார்.




இந்த விசாரணையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் ஆட்சியர் பிரதாப், உதவி இயக்குனர் ஊராட்சிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த விசாரணை சுமார் இரண்டு மணி நேரம் நடைப்பெற்றது. விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஃபாய் கர்மச்சாரி, தேசிய ஆணைய தலைவர் எம். வெங்கடேசன் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் வந்த செய்திகளின் அடிப்படையில் தாம் இந்த விசாரனையை மேற்கொண்டுள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து ஊராட்சி மன்றத்தலைவர்  மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் நேரிடையாக விசாரனை செய்துள்ளதாகவும்,மேலும் அதிகாரிகள் தொடந்து இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள், வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர் உட்பட பலரிடம் விசாரணை செய்து வருவதாகவும், தன்னிடம் உள்ள ஆதாரங்களை ஊராட்சி மன்றத்தலைவர் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையிலும் விசாரனை செய்யப்பட்டு வருவதாகவும், சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் தற்போது தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரின் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேல் நடவடிக்கை மற்றும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வாய்ப்புள்ளதாகவும் வெங்கடேசன் கூறினார்.


 




 


ஊராட்சி செயலாளர் தலைவரை அவதூறாக பேசிய ஆடியோவினை கேட்டுள்ளோம், இதுமட்டுமின்றி பஞ்சாயத் ராஜ் சட்டப்படி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் என்பவர் தனிப்பட்ட சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். பஞ்சாயத்து அலுவலகத்தில் கட்சியின் வண்ணங்களை கொண்டு பஞ்சாயத்து அலுவலக்தில்  பெயர்களை எழுதக்கூடாது. இதற்கு மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நான் தலையிட முடியாது என்றும் கூறினார். மேலும் இது குறித்து கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடையேயும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார் சஃபாய் கர்மச்சாரியின் தேசிய ஆணைய தலைவர் எம். வெங்கடேசன் கூறியபடி மாவட்ட நிர்வாகம் பஞ்சாயத்து அலுவலகத்தில் எழுதப்பட்டுள்ள கட்சி வர்ணங்களில் எழுதப்பட்ட பெயர்களை மாவட்ட நிர்வாகம்  மாற்றம் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது .