ரேஷன் அட்டையுடன் உடனே ஆதாரை இணைக்காவிட்டால் குழந்தைகளின் பெயர்கள் நீக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை கொண்டு இணைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன.  ரேஷன் அட்டை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு  அரிசி, பருப்பு சர்க்கரை, உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும்கிறது, மேலும் அரசின் சில நலத்திட்டங்களும் ரேஷன் அட்டை மூலம் தான் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது ஐந்து வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளின் ஆதார் எண் இணைக்காததால் அவர்களின் பெயர்கள் அதிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.


எனவே தமிழக அரசு இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி உள்ளதாவது: அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற வகையில் ரேஷன் அட்டை அமல்படுத்தப்பட்டது. அந்தவகையில் தற்பொழுது ஒரு நாடு ஒரே ரேஷன் அட்டை என்றும் மாற்றப்பட்டுள்ளது. ரேஷன் அட்டை  மூலம் எண்ணற்ற மக்கள் பயன் பெற்று   வருகின்றனர்.இந்த நிலையில் இதனை தவறாகவும் உபயோகப்படுத்தி வருகின்றனர். ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அதிக அளவு சலுகைகள் கிடைக்கிறது என்று, ஒருவர் பெயரிலேயே வேறு வேறு இடங்களில் ரேஷன் அட்டை வாங்கி அதன் மூலம் பல சலுகைகளை பெற்று கொள்கின்றனர்.


இதனை தடுக்கும் விதமாகத்தான் தமிழக அரசு ரேஷன் அட்டை உள்ளவர்கள் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த வகையில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு ஆதார் அட்டை அட்டை இல்லாத குழந்தைகளின் பெயர்கள் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. எனவே ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை இல்லை என்றாலும் அவர்களின் பிறப்பு சான்றிதழை வைத்து இணைத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.


மேலும், ஒவ்வொரு நியாய விலை கடை ஊழியர்களும் அந்ததந்த கடைக்குட்பட்ட  ஆதார் இணைக்க வேண்டிய குழந்தைகளின் பெற்றோரை நேரிலோ அல்லது அலைபேசியிலோ தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பெயரை நீக்க கூடாது என்றும் அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.


மேலும் படிக்க, 


TN Rain Alert: இன்று 13 மாவட்டங்களுக்கும், நாளை 6 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்


Paddy: தருமபுரியில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமா..?.. கேள்வி எழுப்பும் இபிஎஸ், அன்புமணி - ஆட்சியர் விளக்கம்