நாளை கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் உள்ளது. இது தமிழ்நாட்டில் இருக்கும் பஞ்ச பூத தளங்களில் அக்னி தளமாக அனுசரிக்கப்படுகிறது. இதில் முக்கியமான மகா தீப திருவிழா நாளை நடைபெறூகிறது. கார்த்திகை தீப விழா 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வு நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. நவம்பர் 23  தேரோட்டம் நடைபெற்ற நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


இந்நிலையில் நாளை நடைபெறும் கார்த்திகை தீப திருநாள் மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் 27 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் 2,700 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்படுகிறது.


மேலும் திருவண்ணாமலையில் பக்தர்களின் வருகை ஒட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்தும் மக்கள் கிரிவலப்பாதைக்கு சென்று திரும்ப வசதியாக 40 சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிற்றுந்துகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், பக்தர்கள் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பக்தர்களுக்கு எந்த வித அசௌகரியமும் ஏறபடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.


கார்த்திகை தீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக  நாளை மறுநாள் (நவம்பர் 26) அதிகாலை அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். இந்த நிகழ்வில்  ரூ.500 கட்டணத்தில் 500 பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட உள்ளது. இதேபோல் மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள  2,668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக ரூ.600 கட்டணத்தில் 100 பேருக்கும், ரூ.500 கட்டணத்தில் 1000 பேருக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. பக்தர்கள் www.annamalaiyar.hrce.tn.gov என்ற இணைய தளம் வாயிலாக பக்தர்கள் அனுமதிச்சீட்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மகா தீபம் காண மலையேறும் பக்தர்களுக்கு  பல நிபந்தனைகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி, “நவம்பர் 26 ஆம் தேதி காலை 05.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்படும். அங்கு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை (First Come First Serve Basis) என்ற அடிப்படையில் வரிசைப்படி (Queue System) புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


"ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது" மாநில அரசுகளின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டிய உச்ச நீதிமன்றம்


Villupuram: பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு; வசமாக சிக்கிய ஆசிரியர்கள்