Sabari Mala Special Bus: பக்தர்களே! சபரிமலைக்கு இன்று முதல் முதல் சிறப்பு பேருந்துகள் - எப்போது வரை?

பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை கோயில் உலகப் புகழ் பெற்ற திருக்கோயில் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம்.

Continues below advertisement

சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்:

இந்த நிலையில், நடப்பாண்டி மலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதன்படி, இன்று முதல் ( 16-ந் தேதி முதல்) அடுத்தாண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி/ கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

27.12.2023 முதல் 30.12.2023 மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்பட உள்ளதால், டிசம்பர் 26 முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும்  கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு ஆண்டு தோறும் செல்வார்கள் என்பதால் இந்த சிறப்பு பேருந்துகள் சேவையை தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இந்த சிறப்பு பேருந்துகளை www.tnstc.in  மற்றும் TNSTC Official App மூலமாக முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி எண்கள்:

மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெறுவதற்கு 9445014452, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய செல்போன் எண்களும் உதவி எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் வசதிகள் மட்டுமின்றி பக்தர்களின் வசதிக்காக வாடகை அடிப்படையிலும் பேருந்துகள் விடப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டாலே தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோயில்களுக்கு செல்லும் நிலையில், மகர விளக்கு பூஜை மற்றும் மண்டல பூஜையை காண வழக்கத்தை விட பன்மடங்கு செல்வார்கள். இதை கருத்தில் கொண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது, அதுபோன்ற விசேஷ நாட்களில் வழக்கத்தை விட அதிகளவு பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து மாலை நேரத்தில் பம்பைக்கு சிறப்பு பேந்துகள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டிருப்பது போல, சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ரயில்களும் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:மயிலாடுதுறை சிவாலயங்களில் இருந்து காவிரி துலாக்கட்டத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள்

மேலும் படிக்க: Pilli Suniyam: பில்லி சூனியம் உண்டா? இல்லையா? மாந்திரீகத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

Continues below advertisement