புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 25ம் தேதி (செவ்வாய் கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதற்கு மறுநளான செவ்வாய்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


தீபாவளி பண்டிகை வரும் திங்கள் கிழமை (அக்டோபர் 24)  கொண்டாடப்படுகிறது. வெளி ஊர்களில் பணி செய்பவர்கள் பண்டிகை காலத்தில் சொந்த ஊருக்கு செல்வார்கள். வார இறுதி நாட்களாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமையும் விடுமுறை, திங்கட்கிழமை தீபாவளி. மூன்று நாட்கள் சொந்தங்கள், நண்பர்களுடன் பண்டியை கொண்டாடும் ஆர்வத்தில் எல்லாரும் இருப்பார்கள். தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மறுநாளே வேலை நாள் என்பதால் பண்டிகையன்று இரவு பணி செய்யும் ஊர்களுக்கு திரும்ப வேண்டிய சூழல் இருப்பது மிகவும் சிரமமாக அமையும்.


இந்த நிலையில், தீபவாளி மறுநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய் அன்று (அக்டோபர்,25) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார். 


தீபாவளி:


இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் தீபாவளி திருவிழா இந்திய மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.









ஐப்பசி மாதத்தில் வரும் இந்த தீபாவளி பண்டிகையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்திய மக்களின் பாரம்பரிய மரபுகளை சார்ந்த இந்த தீபாவளியானது பல்வேறு மாநிலங்களிலும் உள்ள மக்களால் சற்று வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது. வீடுகளை தூய்மைப்படுத்தி, அலங்கரித்து பூஜை அறையை சுத்தப்படுத்தி அலங்கரித்தும், இனிப்பு பலகாரங்கள் செய்து, உற்றார் உறவினருடன் கூடி இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

 

தீபாவளி வாழ்த்து மெசேஜ்:

 


குடும்பத்தினருக்கும் சுற்றதாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.


அன்பும் அமைதியும் எப்போதும் நிறைந்திருக்கட்டும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். 


 




உங்கள் குடும்பத்தில் இந்த தீபாவளி அமைதியை கொண்டுவரட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். 


அன்பை மட்டுமே விதைப்போம்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.


உள்ளத்து இருள் நீக்கி நல்லெண்ண நல்லெண்ணெயில் சந்தோச திரி வைத்து அன்பெனும் ஒளி ஏற்றி இனிப்பும் காரமும் இணைந்தே கொண்டாடுவோம் இந்த திருநாளை... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!


இல்லத்தில் உள்ள உறவுகளுக்கும் என் உள்ளத்தில் உள்ள நட்புகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!


உயிரில் கலந்த உறவுகளுக்கும் உணர்வில் கலந்த நட்புகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!


என்றென்றும் உங்கள் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் தொடரட்டும்; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.



 



 

மேலும் வாசிக்க..