மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.


இதனால், பொதுமக்கள் அனைவரும் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் செல்போன்களை சார்ஜ் செய்து வைத்துக்கொள்வது நல்லது. அதேபோன்று மெழுகுவர்த்தி போன்றவற்றையும் தயார்நிலையில் வைத்துக்கொள்வது நல்லது.


சென்னையிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாமல்லபுரத்தில் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, மாமல்லபுரத்தில் இன்று மாலை 6 மணிக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.


இனி காலையில் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தென்மேற்கு வங்க கடலில் உள்ள தீவிர "Mandous" புயல் கடந்த 16 மணி நேரத்தில் 13 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 6:10 மணி நேரத்தில் தென்மேற்கில் மையம் கொண்டிருந்தது.






இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கு-வடகிழக்கே சுமார் 270 கிமீ தொலைவில் (இலங்கை), காரைக்காலில் இருந்து கிழக்கே 200 கிமீ மற்றும் சென்னைக்கு தென்-தென்கிழக்கில் சுமார் 270 கிமீ தொலைவில் உள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய ஆந்திரப் ஆகிய இடங்களை கடந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் புயலாக மாறும்.


Cyclone Mandous LIVE: மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல்


மேலும் இன்று நள்ளிரவு தொடங்கி நாளை அதிகாலை 65 மணி வரை அதிகபட்சமாக 65-75 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.  தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள  ’மாண்டஸ்’ புயல் காரணமாக வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப்  கடற்கரைகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மாண்டஸ் புயலின் காரணமாகக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.