Fisherman Attack: தமிழ்நாடு மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தொடரும் தாக்குதல்:


இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மேலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை உடைத்து வலைகளை அறுப்பதையும் வாடிக்கையாக இலங்கை கடற்படையினர் கொண்டுள்ளனர். தமிழக மீனவர்களின் விலை உயர்ந்த விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சம்பங்களை தடுத்து நிறுத்துமாறு, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை  அளித்த போதிலும், இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது.  இந்நிலையில், நேற்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


மீண்டும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்:


ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர். மேலும், மீனவர்கள் படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, பேட்டரி செல்போன் மற்றும் 20 லிட்டர் டீசல் உள்ளிட்ட பொருட்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.


இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு படகு மற்றும் 6 மீனவர்களையும் சிறைபிடித்தனர். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறிய நடவடிக்கைக்கு மீனவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் பெயர் மற்றும் கூடுதல் விவரங்கள் இலங்கை கடற்படை விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்கள் பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


19 பேர் கைது:


மீன்விலை குறைவு மற்றும் கடல் சீற்றம் காரணமாக 12 நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் இருந்து பெரிய விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் முதல் அவர்கள் கடலுக்கு செல்லக்கூடும் என தெரியவந்ததால், கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டன. மீனவர்களை அச்சுறுத்துவதற்காக அவ்வாறு ரோந்து கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், மீன்பிடிக்க சென்ற முதல் நாளே 19 மீனவர்கள் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 




மேலும் படிக்க 


Singapore: சிங்கப்பூரில் கைமாறும் அதிகாரம்.. அதிபராக இன்று பதவியேற்கும் தமிழர் தர்மன் சண்முகரத்னம்


1000 Rs Scheme: கலைஞர் உரிமைத் தொகை: உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? இதை பண்ணுங்க முதல்ல!