தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதப்புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:


”08.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


09.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


10.12.2023 மற்றும் 11.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) தலா 9, கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), ராஜபாளையம் (விருதுநகர்), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்) தலா 7,போடிநாயக்கனூர் (தேனி), லால்பேட்டை (கடலூர்), பர்லியார் (நீலகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை) தலா 6, வால்பாறை PTO (கோயம்புத்தூர்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), கரூர் (கரூர்), ஆழியார் (கோயம்புத்தூர்) தலா 5.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


அரபிக்கடல் பகுதிகள்: 
08.12.2023 முதல் 10.12.2023 வரை:  தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய  லட்சத்தீவு பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க 


Cyclone Michaung: மிக்ஜாம் புயல் நிவாரண நிதி வழங்க தமிழக அரசு வேண்டுகோள்- வங்கி எண் அறிவிப்பு


Cyclone Michaung Measures : மிரட்டிய புயல்.. மக்கள் இதையெல்லாம் உடனே கடைபிடிங்க.. தமிழ்நாடு அரசு கொடுத்த அறிவிப்புகள்..