விஜய் கட்சி இரட்டை வேடம் போடுகிறது - தமிழிசை சவுந்தராஜன் விமர்சனம்

மகாத்மா காந்தியை தினமும் வார்த்தைகளால் கொன்று இருக்கிறார் திருமாவளவன் - பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை பேட்டி

Continues below advertisement

மகாத்மா காந்தியை வார்த்தைகளால் கொன்று இருக்கிறார் திருமாவளவன்

Continues below advertisement

சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது,

”மெட்ரோ இரண்டாவது கட்ட ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது சென்னையை 4 முனைகளில் இருந்து இணைப்பதற்கும் சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவும்.

ஒரு கோடியே 26 இலட்சமாக இருக்கின்ற மக்கள் தொகை இன்னும் வரும் காலங்களில் ஒரு கோடியே என்பதிலிருந்து 90 லட்சம் ஆகிவிடும் என்று சொல்கிறார்கள் அப்போது சாலை போக்குவரத்து மிகவும் நெரிசல் ஆகிவிடும் என்பதற்காக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நேற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

திருமாவளவன் மாநாடு - ஏன் அந்த தேதியில் வைத்தார் ?

திருமாவளவன் நடத்திய மாநாட்டில் தனக்கு காந்தியின் கொள்கைகள் பிடிக்காது அவர் இந்து மதத்தில் தீவிரமாக இருந்தவர், சாகும் போது கூட ஹரே ராம் என்று கூறியவர் என்பதால் எனக்கு அவரை பிடிக்காது என்று குறிப்பிட்டுள்ளார், திருமாவளவனின் கட்சியில் கூட இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் திருமாவளவன் இந்து மத நம்பிக்கை உள்ளவர் தான். அவர் காந்தி பிறந்த நாள் என்பதற்காக அக்டோபர் இரண்டாம் தேதி மாநாடு நடத்தவில்லை அன்று நிறைந்த அமாவாசை நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்து இருக்கிறார் என்பது தான் உண்மை. 

தேசப்பிதாவை தினம் தினம் வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கிறார், நான் திருமாவளவன் நாகரீகமான தலைவர் என்று நினைத்திருந்தேன் ஆனால் அந்த மேடையில் அவர் பேசியதை பார்த்ததும் அவர் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது என்றும் அவரை வக்கிரதன்மையின் அடையாளமாக பார்க்கிறேன்.

விஜய் கட்சியும் இரட்டை வேடம்

தம்பி விஜய் தனது மாநாட்டு கடிதத்தில் மற்ற கட்சிகளைப் போல் நாம் சாதாரண கட்சி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். எத்தனையோ கட்சிகள் ஆண்ட கட்சிகளாக இருக்கின்றன பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்றன உங்கள் கட்சி புதிய கட்சி உங்கள் கட்சியை உயர்வாக சொல்வதில் தவறில்லை அதே நேரத்தில் மற்ற கட்சிகளையும் அதன் தலைவர்களையும் மதிக்க வேண்டும். இப்போது ஒரு குட்டி திராவிட கட்சியைப் போலத்தான் விஜயின் கட்சியும் இருக்கிறது பெரியாரையும் கும்பிடுகிறார்கள் கடவுளையும் கும்பிடுகிறார்கள் நேரம் காலம் பார்த்து தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள் அதாவது திமுக எதை செய்கிறதோ அதே போலத்தான் தம்பி விஜய்யின் கட்சியும் செய்கிறது, சுருங்கச் சொன்னால் திமுகவை போல் விஜய் கட்சியும் இரட்டை வேடம் போடுகிறது

காந்தியை விமர்சித்த பிறகும் திருமாவளவனை காங்கிரஸ் கூட்டணியில் வைத்திருக்கிறது. காங்கிரசை பொருத்தவரை காந்தியை விமர்சித்தால் கண்டு கொள்ள மாட்டார்கள் சோனியா காந்தியையோ ராகுல் காந்தியையோ விமர்சித்தால் மட்டுமே துள்ளி குதிப்பார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola