மயிலாடுதுறையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் நாட்களில் அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகிறனர். இந்நிலையில் தமிழகத்தில் முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.


TN LEADERS ON CAA: சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு - ஒன்று கூடிய தமிழக அரசியல் தலைவர்கள், கடும்எதிர்ப்பு




மேலும் வழக்கம்போல தனித்து நாம் தமிழர் கட்சி போட்டியிடும் சூழலில் திமுக தனது கூட்டணியை பங்கீட்டை நிறைவு செய்து வேட்பாளர் தேர்வில் தீவிரமாக உள்ளது. அதிமுகவில் இன்னும் கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுபோன்று தமிழகத்தில் உள்ள பெரிய மற்றும் முக்கிய கட்சியினர் தீவிரமாக தங்களின் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மயிலாடுதுறையில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் செல்வம் கலந்து கொண்டு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குமரனை நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். 


EPS On CAA: அன்று ஆதரவு; இன்று கடும் எதிர்ப்பு - சிஏஏ விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு என்ன?




அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் செல்வம் கூறியதாவது, கடந்த சட்டமன்ற தேர்தலில் உரலும் குலவி சின்னத்தில் போட்டியிட்டதாகவும், தற்போது பாராளுமன்ற தேர்தலில் அதே சின்னம் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் திராவிட மற்றும் தேசிய கட்சிகள் தங்களை முற்றிலுமாக மறுத்ததாகவும், மத்திய வேலைவாய்ப்பில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனவும் கூறினார்.


Haryana CM: ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா - அமைச்சரவை கூண்டோடு கலைப்பு




மேலும் எங்களது வேட்பாளர் வெற்றி பெற்றால் ஓபிசியில் பல்வேறு பிரிவுகளை உருவாக்கிட வேண்டுமென பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம். மேகதாது அணை கட்டுவதை முற்றிலுமாக தடுத்து தமிழகத்துக்கு உரிய நீரை எங்களது வேட்பாளர் வெற்றி பெற்ற பிறகு பெற்று தருவார் என்றார். தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் தமிழக முழுவதும் 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.


திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு: யாருக்கு எங்கே? வெளியான அறிவிப்பு