AIADMK News LIVE: ஒற்றை தலைமை என நான் கூறியது, ஒன்றும் சிதம்பர ரகசியமில்லை. யாரும் பூச்சாண்டி காட்டமுடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

AIADMK News LIVE Updates: அதிமுகவில் இரட்டை தலைமைக்குப் பதில், ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில், அது தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகளை இந்த பகுதியில் காணலாம்.

பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் Last Updated: 18 Jun 2022 01:45 PM
அதிமுக என்னும் பெருங்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் எண்ணத்தை மாவட்ட செயலாளர்கள் பிரதிபலிப்பார்கள் - ஜெயக்குமார்

அதிமுக என்னும் பெருங்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் எண்ணத்தை மாவட்ட செயலாளர்கள் பிரதிபலிப்பார்கள் - ஜெயக்குமார்

12 பேர் கொண்ட தீர்மானக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்ஸும் கலந்துகொண்டார் - ஜெயக்குமார்

12 பேர் கொண்ட தீர்மானக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்ஸும் கலந்துகொண்டார் - ஜெயக்குமார்

ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா என்பதை மாவட்ட செயலாளர்களே முடிவு செய்வார்கள் - ஜெயக்குமார்

ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா என்பதை மாவட்ட செயலாளர்களே முடிவு செய்வார்கள் - ஜெயக்குமார்

என்னிடம் பூச்சாண்டி காட்டமுடியாது. நான் பூச்சாண்டி காட்டப்படுவதற்கு பயப்படமாட்டேன் - ஜெயகுமார்

என்னிடம் பூச்சாண்டி காட்டமுடியாது. நான் பூச்சாண்டி காட்டப்படுவதற்கு பயப்படமாட்டேன் - ஜெயகுமார்

ஒற்றை தலைமை கோரிக்கை ரகசியமானதல்ல. அது அதிமுக தொண்டர்களின் கோரிக்கை - ஜெயகுமார்

ஒற்றை தலைமை கோரிக்கை ரகசியமானதல்ல. அது அதிமுக தொண்டர்களின் கோரிக்கை - ஜெயகுமார்

அதிமுக இனை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கட்டாயம் பங்கேற்க வேண்டுமென்பதில்லை - ஜெயகுமார்

அதிமுக இனை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கட்டாயம் பங்கேற்க வேண்டுமென்பதில்லை - ஜெயகுமார்

ஒற்றை தலைமை என நான் கூறியது, ஒன்றும் சிதம்பர ரகசியமில்லை. யாரும் பூச்சாண்டி காட்டமுடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

ஒற்றை தலைமை என நான் கூறியது, ஒன்றும் சிதம்பர ரகசியமில்லை. யாரும் பூச்சாண்டி காட்டமுடியாது - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

ஒற்றைத் தலைமை விவகாரம் : ஓ.பி.எஸ்ஸுக்கு 11 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு எனத் தகவல்

ஒற்றைத் தலைமை விவகாரம் : ஓ.பி.எஸ்ஸுக்கு 11 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு எனத் தகவல்

எடப்பாடி பழனிசாமியுடன் கேபி முனுசாமி, எம்பி  தம்பிதுரை சந்திப்பு

 எடப்பாடி பழனிசாமியுடன் கேபி முனுசாமி, எம்பி  தம்பிதுரை சந்திப்பு - சேலத்தில் உள்ள பழனிசாமி வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது

பொதுக்குழு தீர்மானம் ஆலோசனை கூட்டம்- ஓ.பன்னீர்செல்வம் வருகை- எடப்பாடி ஆதரவாளர்கள் புறக்கணிப்பு

அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், கட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் அலுவகம் விரைந்தார். இந்நிலையில், அங்கிருந்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள், பன்னீர்செல்வத்தை சந்திப்பதை தவிர்க்க முன்னாதாக ஆலோசனை கூட்டத்தை முடித்து கொண்டு வெளியேறினர். அங்கிருந்து சி.வி.சண்முகம், வளர்மதி, மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் பன்னீர்செல்வம் உடனான சந்திப்பை தவிர்க்கவே அங்கிருந்து விரைந்து சென்றனர். ஏற்கனே கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில், எடப்பாடி ஆதரவாளர்கள், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் என்று இருவருக்குமிடையே இப்படியான நிகழ்வுகள் அதிருபதியை மேலும் அதிகரித்துள்ளது. பன்னீர்செல்வம் வருகைக்கு முன்னேரே ஆலோசனை கூட்டம் முடிக்கப்பட்டது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கும் ஜெயக்குமார் எந்த பதிலும் சொல்லவில்லை.  

இரட்டை குழல் துப்பாக்கியாக இருந்தாலும் ஒற்றை குழல் துப்பாக்கியாக இருந்தாலும் தோட்டா வேண்டும் - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கருத்து

தொண்டர்கள் அமைதி காக்குமாறு ஓ.பி.எஸ் வேண்டுகோள்..!

அதிமுக தொண்டர்கள் அனைவரும் தயவு செய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் டிவீட்..!

அதிமுக தொண்டர்களுடன் ஓபிஎஸ் சந்திப்பு: ஒற்றை தலைமை ஓபிஎஸ் என தொண்டர்கள் முழக்கம்

ஒற்றை தலைமை ஆலோசனைக்கு இடையே, வீட்டில் குவிந்துள்ள அதிமுக தொண்டர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சந்தித்தார். அப்போது ஒற்றை தலைமை ஓபிஎஸ் என தொண்டர்கள் முழக்கமிட்டனர்

கட்சிக்கு ஒற்றைத் தலைமை அவசியமானது - தொல். திருமாவளவன்

''கட்சிக்கு ஒற்றைத் தலைமை அவசியமானது. இரண்டு தலைமை என்பது  கட்சியின் வளர்ச்சிக்கு ஏதுவானதல்ல. அதிமுக ஒற்றை தலைமை நோக்கி நகர்வது ஒருவகையில் வரவேற்கத்தக்கது,  அந்த வகையில்  வரவேற்கிறேன்'' -  தொல். திருமாவளவன்

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆலோசனை

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆலோசனை

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆலோசனை

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

ஓபிஎஸ்.,க்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்

தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஒற்றை தலைமையாக ஓபிஎஸ் தேர்வாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். 

ராஜேந்திரபாலாஜி பங்கேற்பதில் சிக்கல்

வரும் ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறவிருக்கும் நிலையில், நிபந்தனை ஜாமினில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தான் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளபடி செய்யப்பட்டது 

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலை மறியல்

சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டிய ஒற்றைத் தலைமை போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால், ஓபிஎஸ் இல்லம் முன்பு குவித்திருந்த அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஓபிஎஸ்-இபிஎஸ் வீடுகளில் அடுத்தடுத்து ஆலோசனை

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோரிடம் அடுத்தடுத்து மாறி மாறி ஆலோசனை செய்து வருகின்றனர். 

Background

AIADMK News LIVE Updates:


அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டை எம்.ஜி.ஆர்., மாளிகையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர்கள் அனைவரும், ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். 


அதிமுகவை, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வழிநடத்தி வரும் நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் பணியிடம் ஜெயலலிதாவிற்கு பின் காலியாக உள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பின் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக ஒரு தரப்பினர் தேர்வு செய்தனர். பின்னர், பிரிந்து கிடந்த இபிஎஸ்-ஓபிஎஸ் அணி இணைந்த பின், சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். அதுமட்டுமின்றி, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவும் சிறைக்குச் சென்றதால் எந்த இடையூறும் இன்றி, அதிமுகவையும், ஆட்சியையும் இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டணி வழிநடத்தியது. 


அதன் பின் சசிகலா விடுதலையாகி வர, தேர்தலும் வர, அதன் பின் அதிமுக தோல்வியடைந்தது. அதன் பின், தோல்விக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் தான் காரணம் எனக்கூறி, அதிமுகவின் தலைமையை ஏற்க சசிகலா புறப்பட்டார். சட்டரீதியாக அவர் மேற்கொண்ட நடவடிக்கையும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்த, எதிர்கட்சியான பிறகும் ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டணியே அதிமுகவை வழிநடத்தியது. இருப்பினும், அதிமுக பொதுச் செயலாளர் என்றே சசிகலா தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.


 


இந்நிலையில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஜூன் 23 ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமை குறித்த விவாதத்தை அனைவரும் ஒரே நேரத்தில் எழுப்பியுள்ளனர். இந்த கோரிக்கை அதிமுகவிற்கு புதிதல்ல என்றாலும், இந்த நேரத்தில் எழுப்ப காரணம், அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பை நியமிக்கவே என்கிறார்கள். 


முதல்வர் பொறுப்பை ஏற்ற போதும், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பின் போதும், தோல்விக்குப் பின் எதிர்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்கும் போதும், இபிஎஸ் தான் அதிமுகவில் தனக்கான இடத்தை தக்க வைத்து வருகிறார். அதே நேரத்தில் ஓபிஎஸ் அடம் பிடித்தாலும், ஒவ்வொரு இடத்திலும் அவர் இறங்கியே போயிருக்கிறார். இம்முறை, ஒற்றை தலைமை என வரும் போது, அதிலும், கண்டிப்பாக இபிஎஸ்., தான் முன்னிலைப்படுத்த வாய்ப்புள்ளது. காரணம், ஆட்சி-கட்சி இரண்டும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்பதை தான் அதிமுகவினர் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், இபிஎஸ்.,யை முன்னிறுத்தியே தற்போதைய அதிமுக நகர்த்தப்படுகிறது. கடந்த காலத்தில் அவர் செய்த ஆட்சியை ஒப்பிட்டே, தற்போதைய திமுக ஆட்சி விமர்சிக்கப்படுகிறது. எனவே, கட்சி தலைமையை இபிஎஸ் கைப்பற்றவே வாய்ப்புள்ளது.


அப்படியிருக்கும் போது, அதிமுகவின் பொதுச் செயலாளராக வரும் பொதுக்குழு, செயற்குழுவில் இபிஎஸ் தேர்வாக வாய்ப்புள்ளது. அப்படியென்றால் ஓபிஎஸ் நிலை என்ன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இது ஒருபுறமிருக்க தான் தான் கட்சியின் பொதுச் செயலாளர் என்று கூறி வரும் சசிகலாவின் பிரசாரத்திற்கு முடிவு கட்ட, கட்டாயம் பொதுச் செயலாளர் நியமனம் வேண்டும் என்பதன் அடிப்படையில் தான், இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.