சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற கிருத்திகை வழிபாடில் காசி ஆன்மீக பயணத்தை முடித்துக்கொண்டு நேராக வந்து  தருமபுரம் ஆதீனம் கலந்துகொண்டு வழிபாடு மேற்கொண்டார்.


வைத்தீஸ்வரன்கோயிலின் சிறப்புகள் ;


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.


TN New Municipal Corporation: தமிழ்நாட்டில் நான்கு புதிய மாநகராட்சிகள் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு




கார்த்திகை வழிபாடு :


இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் அன்று முத்துக்குமாரசாமிக்கு கீர்த்திகை வழிபாடு நடைபெறும்.  அந்த வகையில் இன்று பங்குனி மாத கார்த்திகையை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி கார்த்திகை மண்டபத்திற்கு வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளினார். அங்கு அவருக்கு பால், பன்னீர்,  இளநீர், திரவியம், மஞ்சள்,  சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


Election Commissioners Appointment: தேர்தல் ஆணையர் நியமனம்.. தடை விதிக்க மறுப்பு.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!




காசியில் இருந்து திரும்பிய  தருமபுரம் ஆதீனம்


இந்நிகழ்வில் காசிக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்த  தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சொக்கநாததருடன்  ஞானரதத்தில்  வருகை புரிந்து, வைத்தீஸ்வரன்கோயில் கிருத்திகை வழிப்பாட்டில் பங்கேற்று தரிசனம் செய்தார். இதில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


Amitabh Bachchan : பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி... என்ன ஆச்சு?




மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் குறித்த ஆபாச வீடியோ இருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக 4 கைது செய்யப்பட்டு மேலும் சிலர் தலைமறைவாக இருந்துவரும் நிலையில் தருமபுரம் ஆதீனம் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்திற்கு திரும்பியுள்ளது குறிப்பிட்டதக்கதாகும்.


Electoral bond: தேர்தல் பத்திரங்களில் எந்த நிறுவனங்கள் எவ்வளவு நிதி? லிஸ்ட்டில் டாப் 5 நிறுவனங்கள்