Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (18.01.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மயிலாடுதுறை மின் கோட்ட மின்வாரிய செய்தி குறிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை 18.01.2025 சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மயிலாடுதுறை புறநகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை கோட்டத்தில் எதிர்வரும் 18.01.2025 சனிக்கிழமை அன்று மயிலாடுதுறை 110/33/11 KVSS துணைமின் நிலையத்தில் உள்ள 11கிவே வழுவூர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்க்கொள்ள இருப்பதால் 11கிவோ வழுவூர் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின் விநியோகம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளான,
மின்நிறுத்த பகுதிகள்
எலந்தங்னுடி, திருநாள் கொண்டச்சேரி, வழுவூர், பண்டாரவடை, வாளவராயன்குப்பம், கப்பூர், பூவாலை, பெரியேரி, கோடங்குடி, முட்டம், ஊர்குடி, நெடுமருதூர், பட்டமங்கலம், RK புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை நகர் பகுதி
இதேபோன்று மயிலாடுதுறை நகர் உதவி செயற்பொறியாளர் கலியபெருமாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான, சீனிவாசபுரம், சுப்பிரமணியபுரம், சத்திய சாய் நகர், பட்டமங்கள ஆராய தெரு, திருவாரூர் ரோடு, காமராஜர் சாலை, ரேவதி நகர், மீன் மார்க்கெட், திருமஞ்சன வீதி, பாசிகடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
சீர்காழி மின்வாரிய கோட்ட மின்நிறுத்தம்
சீர்காழி மின்வாரிய கோட்டம் செம்பனார்கோயில் உதவி செயற்பொறியாளர் சரவணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட 110/11 KV கிடாரங்கொண்டான் துணைமின்நிலையத்தில் இருந்து செல்லும் 11 KV மணிகிராமம் மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 11 KV மணிகிராமம் மின்பாதையிலிருந்து மின்விநியோகம் பெரும்பகுதிகளான ஆலங்காடு, ராதாநல்லூர், இளையமதுகுடம், மற்றும் 110/11 KV கிடாரங்கொண்டான், துணைமின்நிலையத்திலிருந்து செல்லும் 11 KV செம்பனார்கோயில் மின்பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 1KV செம்பனார்கோயில் மின்பாதையிலிருந்து மின்விநியோகம் பெரும்பகுதிகளான கிடாரங்கொண்டான், பொன்செய், கீழையூர், செம்பனார்கோயில் பரசலூர் மெயின் ரோடு, மேலப்பாதி, கருவாழக்கரை, மேலையூர், கஞ்சாநகரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் 18.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.