மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மின் நிலைய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், வரும் மே 14, 2026 அன்று பல பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மின்வாரியத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு, பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

Continues below advertisement

இது குறித்து சீர்காழிகோட்ட பராமரிப்பு உதவி செயற்பொறியாளர் கலைச்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பின்படி க்ஷ, சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன் கோயில் துணை மின் நிலையத்தில் அவசியமான பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்தப் பணிகள் மின்சார விநியோகத்தின் தரத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், பல கிராமங்கள் மற்றும் நகர்ப்பகுதிகள் மின்தடைக்கு உள்ளாகும். மே 14 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் முடிவடைந்தால், மின்சாரம் அதற்கு முன்பே வழங்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மின்தடை அமல்படுத்தப்படும் பகுதிகளில்

* சீர்காழி நகரம்

Continues below advertisement

* சீர்காழி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் 

* புங்கனூர்

* சட்டாநாதபுரம்

* மேலசாலை

* கதிராமங்கலம்

* ஆத்துக்குடி

* திருப்புங்கூர்

* பனமங்கலம்

* கோவில்பத்து

* புளிச்சக்காடு

* கற்பகம் நகர்

* தென்பாதி

* கொள்ளிடம் முக்கூட்டு,

* விளந்திட சமுத்திரம்

மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் அடங்கும். இப்பகுதிகளில் வீடுகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகள் மின்சார வசதியின்றி இருக்கும்.

இதேபோன்று, மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட பெரம்பூர் துணை மின்நிலைய பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக இயக்குதல் மற்றும் பராமரிப்பு மயிலாடுதுறை நகர் உதவி செயற்பொறியாளர் அருள்செல்வன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அதன்படி, கீழ் வரும் பகுதிகளான 

* பெரம்பூர்

* கடக்கம்

* கிளியனூர்

* சேத்தூர்

* முத்தூர்

* எடக்குடி

* பாலூர்

* கொடைவிளாகம்

* ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 

நாளை மே 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை அமல்படுத்தப்படும். இதனால், விவசாய பணிகள், சிறு தொழில்கள் மற்றும் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம்.

இந்த நிலையில், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக, குடிநீர் சேமிப்பு, மின்சார சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்துதல், மின்தடை நேரத்தில் தேவையற்ற மின்சார உபயோகத்தை தவிர்த்தல் போன்றவற்றை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்தடை காலத்தில் அவசர தேவைகளுக்காக ஜெனரேட்டர்கள் மற்றும் மாற்று மின்சார வசதிகளை பயன்படுத்தும் நிறுவனங்கள், பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய சேவை நிறுவனங்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின்விநியோகத்தில் ஏற்படும் தடங்கல்கள் குறைக்கப்பட்டு, மின்சார வழங்கல் சீராக இருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கோடைகாலத்தில் அதிகரிக்கும் மின்சார தேவையை சமாளிக்க இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். தற்காலிக சிரமத்தை பொறுத்து, நீண்டகால பயனை பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், மே 14 அன்று நடைபெறவுள்ள இந்த மின்தடை அறிவிப்பு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், மின்சார சேவையின் தரத்தை உயர்த்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால், இந்த மின்தடையின் தாக்கத்தை குறைக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.