சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் உயிரிழந்த சோகம்

சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறையில் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

சீர்காழி அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறையில் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவரின் மகன் 50 வயதான குரல் மணி. இவர் தனக்கு சொந்தமான பைபர் படையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா கிள்ளை பில்லுமேடு பகுதியைச் சேர்ந்த செல்வமணி என்பவரது மகன் 48 வயதான செந்தில் வீரன் என்பவருடன் நேற்று இரவு 11 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். 

Continues below advertisement

OTT Release: மத்தகம், லேபிள் வரிசையில் புதிய ஹாட்ஸ்டார் சீரிஸ்: டாக்டர்கள் பற்றிய ஹார்ட் பீட் ரிலீஸ் தேதி அறிவிப்பு!


பழையார் முகத்துவாரம் அருகே கடலில் மீன் பிடித்த போது எதிர்பாராத விதமாக அலையில் சிக்கி அவர்களது படகு கடலில் கவிழ்ந்து உள்ளது. இதில் செந்தில் வீரன் கடலில் மூழ்கியுள்ளார். நீந்தி கரை திரும்பிய குரல் மணி இதுகுறித்து அளித்த தகவலின் பெயரில் சக மீனவர்கள் கடலுக்குள் படகில் சென்று செந்தில் வீரனை தேடினர். இந்நிலையில் செந்தில் வீரன் இறந்த நிலையில் அவரது உடல் கொடியம்பாளையம் கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. 

Sovereign Gold Bond தொடங்கியது தங்க பத்திரம் விற்பனை; விலை எவ்வளவு? எப்படி வாங்குவது? -விவரம்!


இதனை அடுத்து தகவல் அறிந்த புதுப்பட்டி கடற்கரை காவல் நிலைய காவல்துறையினர் செந்தில் வீரன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறையில் மாவட்ட கடலோர கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rice Chips : மக்களே.. சமைத்த சாதம் மீதமாகிவிட்டதா? வற்றலும், ஆப்பமும் ரெடி பண்ணலாம் வாங்க..

Continues below advertisement
Sponsored Links by Taboola