தமிழ் சினிமாவில் பிரபலமான  நடிகரும் தேமுதிக தலைவருமான நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த நவம்பர் 18ம் தேதி இருமல், சளி , தொண்டை  வலி உள்ளிட்ட பிரச்சினைகளால் போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Vijayakanth: உங்க வீட்டுல எனக்கு ஒரு இடம் தர மாட்டீங்களா.. கண்கலங்க வைக்கும் விஜயகாந்தின் வைரல் வீடியோ!



இப்படிப்பட்ட சூழலில் மருத்துவமனை வெளியிட்டுள்ளார் அறிக்கையின் பேரில் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் உடல்நிலை சீராக இல்லை என்றும் நுரையீரல் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது என்றும் வெளியான தகவல் பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திண்டுக்கல்லில் விநாயகர் முருகன் கோயிலில் தேமுதிக நிர்வாகிகள் பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.


IND Vs AUS LIVE Score: பேட்டிங் கோதாவில் களமிறங்கும் இந்தியா; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு




விஜயகாந்த் உடல்நிலை குறித்து பரவிய வதந்தியால் மனமுடைந்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா வீடியோ மூலம் விளக்கம் ஒன்றை கொடுத்து இருந்தார். விஜயகாந்த் உடல்நிலை குறித்து கட்சி தொண்டர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் தேவை இல்லாமல் யாரும் பயப்பட வேண்டாம், வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் விஜயகாந்த் பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். ரசிகர்கள், தொண்டர்கள் பலரும் விஜயகாந்த் உடல்நிலை சீராகி வீடு திரும்ப சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். பல அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவரின் உடல்நிலையில் முன்னேற்ற பெற பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.  


Michaung cyclone: புயலை எதிர்கொள்ள தயாரான காஞ்சி மாவட்ட நிர்வாகம் - ஏற்பாடுகள் என்னென்ன..?


இந்த நிலையில் திண்டுக்கல்லில் அருள்மிகு வெள்ள விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் மாதவன் மற்றும் மகளிர் அணி தலைவர் கவிதா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு விஜயகாந்த் பூராம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.