சிறைவாசி அலெக்ஸ் பாண்டியன் என்பவர் 532 எடுத்து இரண்டாம் இடத்தையும், அருண் குமார் என்பவர் 506 எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.


 


TN 12th Results 2024


தமிழ்நாட்டில் உள்ள மாநில கல்வி பாடத்திட்டத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடந்தது. சுமார் 7,80,550 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்றது.  இதில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் திட்டமிட்டபடி மே 6ஆம் தேதியான இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.70 சதவிகிதம் ஆகவும், அரசு பள்ளிகளில் 91.32  சதவிகிதம், அரசு உதவி பெறும் பகுதிகளில் 95.49 சதவிகிதம் ஆகவும் உள்ளது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 0.58 சதவிகிதம் உயர்ந்துள்ளது. தேர்வு முடிவுகளை   www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ,www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் வழியாக காணலாம். அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் குறுஞ்செய்திகள் வழியாகவும் தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அனுப்பப்பட உள்ளது. 


மதுரை


இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் 95.19% தேர்ச்சி விகிதம்  மாணவி,மாணவர்கள் அடைந்துள்ளனர். அதே போல் மதுரை மத்திய சிறையில் 12 -ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.







மதுரை மத்திய சிறை

 

மதுரை மத்திய சிறையில் 12 வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 15 தண்டனை சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசி ஆரோக்கிய ஜெய பிரபாகரன் என்பவர் 536 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார். சிறைவாசி அலெக்ஸ் பாண்டியன் என்பவர் 532 எடுத்து இரண்டாம் இடத்தையும், அருண் குமார் என்பவர் 506 எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் பெண்கள் சிறையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இந்தாண்டு யாரும் எழுதவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.