தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கொளுத்திய கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் சற்று குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




கத்தரி வெயில் துவக்கம்


தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்கிய நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் அளவு சுமார் 105 டிகிரி வரை இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் நேற்று தமிழகத்தில் உள்ள திண்டுக்கல், தேனி, மதுரை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மாலை 6:30 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.


PBKS vs CSK LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்; பேட்டிங்கில் திணறும் பஞ்சாப் கிங்ஸ்!




திண்டுக்கல் மாவட்டத்தில் மழை


இந்நிலையில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில்  காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை 4 மணி அளவில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய இடி மின்னலுடன் கனமழை பெய்ய துவங்கியது.  திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணமாக வெயிலின் தாக்கத்தில் சிக்கித் தவித்த பொதுமக்கள் சற்று ஆசுவாசம் அடைந்தனர். திண்டுக்கல்லில் பெய்த இந்த கனமழையானது திண்டுக்கல் பேருந்து நிலையம், காட்டாஸ்பத்திரி, எம்.வி.எம் காலேஜ், செட்டிநாயக்கன்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பொன்னகரம், தோமையார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் நகரில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்த பொதுமக்களுக்கு குளிர்ச்சியூட்டிய மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


மர்மமாக உயிரிழந்த நெல்லை காங்கிரஸ் தலைவர் உடல் நல்லடக்கம் - தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி




தேனி மாவட்டத்தில் ஒரு சில பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழை


அதேபோல தேனி மாவட்டத்தில் குறிப்பாக ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும்  தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமான கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளையொட்டியுள்ள கம்பம், கூடலூர், உத்தமபாளையம், காமய கவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக  பெய்த மழையின் காரணமாக பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்துள்ளது.  நீண்ட நாட்களாக வெயிலின் தாக்கம் சுட்டெரித்து கொண்டிருந்த நிலையில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.