தேனி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும் கும்பக்கரை அருவி. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொடைக்கானல், வட்டக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்தால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து ஏற்படும். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக கொடைக்கானலில் மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக கும்பக்கரை அருவியில் தண்ணீர் அதிகரிக்க தொடங்கியது.
Online Rummy: ஆன்லைன் ரம்மியால் மீண்டும் சோகம்..! ரூ. 4 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை - திருச்சியில் அதிர்ச்சி
மற்றவர்களை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். மேலும் அருவியின் மற்றொரு பகுதியில் தவித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள பாலம் வழியாக வெளியே வருமாறு சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அறிவுறுத்தினர். அதன்படி அங்கு வந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்த திடீர் வெள்ளப்பெருக்கினால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால், கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் அருவி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்