தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மயிலாடும்பாறை அருகே உள்ள குமணன்தொழு கிராமத்தை சேர்ந்தவர் வனராஜ் (64). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2014-ம் ஆண்டு அதே ஊரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (26) என்பவர் அவரிடம் தகராறு செய்தார். மேலும் லோகேஸ்வரனின் உறவினர்கள் சிலரும் வனராஜிடம் தகராறு செய்தனர்.


Theni : அக்டோபர் 1 முதல் செயல்பாட்டுக்கு வரும் உப்பார்பட்டி சுங்கச்சாவடி...! முழு கட்டண விவரம் உள்ளே...!


இதுகுறித்து மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக வனராஜ் தனது மகன் ஜெயக்குமாருடன் (43) சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை லோகேஸ்வரனின் உறவினர் தயாநிதி (34) என்பவர் வழிமறித்து, பீர் பாட்டினால் தாக்கினார். இதில் தந்தை, மகன் இருவரும் காயம் அடைந்தனர். பலத்த காயம் அடைந்த ஜெயக்குமார் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு.. பள்ளிக்கல்வித்துறை சொன்ன காரணம் இதுதான்!


இந்த சம்பவம் குறித்து வனராஜ் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், தயாநிதி, லோகேஸ்வரன் மற்றும் அவர்களின் உறவினர்கள் பவுன்சாமி, வனராணி, பங்கஜம் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணையை தொடர்ந்து நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பளித்தார்.


ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்கு.. இருநாட்டு உறவு.. ஜப்பான் பிரதமரை சந்தித்தார் பிரதமர் மோடி..!


Vegetables Price List : சோகமான புதுமண தம்பதிகள்.. அதிரடியாக உயர்ந்த முருங்கை.. குறைந்த பீட்ரூட்.. இன்றைய நிலவரம்!


இந்த வழக்கில் தயாநிதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும், லோகேஸ்வரன், பவுன்சாமி, வனராணி, பங்கஜம் ஆகிய 4 பேருக்கும் தலா ரூ.500 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட தயாநிதி கூலித்தொழிலாளி ஆவார்.