தேனி மாவட்டத்தில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண்களுக்கு அரசால் வழங்கும் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.




இலவச தையல் இயந்திரம் :- 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பொருளாதார நிலையில் திட்டமிடபட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவும் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் புதிதாக செயல்படுத்த அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. எனவே தேனி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் சமூகத்தை சார்ந்த இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர்,  பார்சிகள் மற்றும் ஜெயின்  இனத்தை  சார்ந்த  பயனாளிகள் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற தகுதிகள் கீழ்கண்டவாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.




பென்னிகுவிக்கின் பிறந்த நாள் விழாவை, அரசு விழாவாக கொண்டாடுவது குறித்து அறிவிப்பு வராதது ஏன்? - விவசாயிகள் கேள்வி


 


இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு தகுதியான நபர்கள்: -


தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும் மற்றும் தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்


வயது வரம்பு 20 முதல் 45 வரை இருக்க வேண்டும்.


கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


ஒரு முறை தையல் இயந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர்.


Pongal 2022 : பாரம்பரிய மண்வாசனை..பொங்கல் நாள் ஒளி.. மண்பானை உணவின் நற்பலன்கள் தெரியுமா?




விண்ணப்பிக்கும் முறை :-


தேனி மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து தகுதி இருப்பின் முன்னுரிமை அடிப்படையில் தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். எனவே, தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயனடையலாம்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண