மது போதையில் தனியார் பள்ளிக்குள் புகுந்து பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியையான மனைவியை கணவர் பிளேடால் கிழித்தார். இதனால்,  பள்ளி குழந்தைகள் பயத்தில் அலறினர். தடுக்க வந்த சக ஆசிரியருக்கும் பிளேடால் கிழித்ததில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த இரண்டு பெண் ஆசிரியர்களும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு பகுதியில் விக்டரி நர்சரி அண்ட் பிரைமரி ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகள் பயின்று வருகின்றனர்.


நடிகை கீர்த்தி பாண்டியனை மணந்தார் நடிகர் அசோக் செல்வன்.. இணையத்தில் தெறிக்கும் திருமண புகைப்படங்கள்!


இந்தப் பள்ளியில் T. கள்ளிப்பட்டியை சேர்ந்த பிரியங்கா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். எனவே ஆசிரியர் பிரியங்கா அவரது கணவரான ரமேஷுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது போதையில் ரமேஷ், மனைவி பிரியங்கா பணிபுரியும் தனியார் பள்ளிக்குள் நுழைந்து அவர் வைத்திருந்த பிளேடால் பிரியங்காவை கழுத்து பின்பகுதி மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக கிழித்துள்ளார்.




அப்போது அங்கே இருந்த சக பெண் ஆசிரியர் தடுக்க முற்பட்டபோது அவரையும் பிளேடால் கையில் கிழித்துள்ளார். இதனைப் பார்த்த பள்ளி குழந்தைகள் அலறி அடித்து பள்ளி வகுப்பறைக்குள் அங்குமிங்கும் ஓடி கூச்சலிட்டுள்ளனர். இதனைத்  தொடர்ந்து பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது.


Cabinet Meeting: பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.. குறைகிறது பெட்ரோல், டீசல் விலை?




இதனைத்தொடர்ந்து, மது போதையில் பள்ளிக்குள் நுழைந்து பள்ளி குழந்தைகள் முன்பு மனைவியையும் சக ஆசிரியரையும் பிளேடால் கிழித்த இளைஞரை கைது செய்து பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் காயமடைந்த பிரியங்கா மற்றும் சக ஆசிரியர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ரமேஷ் நேற்று மாலை அவர் மனைவியின் தாய் வீட்டிற்கு சென்று பிரியங்காவின் தாயை தாக்க முற்பட்டபோது தடுக்க வந்த நபரையும் தாக்கியதாகவும் அது குறித்து தென்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்குள் புகுந்து மனைவி மற்றும் சக ஆசிரியரை பிளேடால் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பள்ளி குழந்தைகளிடையே அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.


Nipah Virus: கேரளாவில் பரவும் நிபா வைரஸ்.. தமிழ்நாடு எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்..