தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பிரிதிவிராஜ் (48). இவர் அப்பகுதியில் கடை ஒன்றில்  வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி ஹெலினா வளர்மதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு கணவன், மனைவி  இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அப்போதைய சூழ்நிலையில் ஹெலினா வளர்மதியின் மகன் உத்தமபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். அவரை, ஹெலினா வளர்மதியின் சித்தி பாத்திமா ராணியின் மகன் லாரன்ஸ் என்ற அமலா லாரன்ஸ் (31) தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.


CJI DY Chandrachud: உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் டி.ஒய்.சந்திரசூட்!



இந்நிலையில், தனது மனைவி பிரிந்து சென்றதற்கு மைத்துனர் லாரன்ஸ் தான் காரணம் என பிரிதிவிராஜ் கருதியதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த 22-11-2017 அன்று உத்தமபாளையத்தில் உள்ள ஒரு பள்ளி அருகில் லாரன்ஸ் நின்று கொண்டு இருந்த போது, பிரிதிவிராஜ் அங்கு  சென்றுள்ளார். அப்போது அவர் ஒரு பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை லாரன்ஸ் மீது ஊற்றியுள்ளார். இதனால், அங்கிருந்து அவர் தப்பி செல்ல பிரிதிவிராஜ் அவரை துரத்திச் சென்று அவர் மீது தீ வைத்தார்.


ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பப் பெறுங்கள்: ஜனாதிபதிக்கு பறந்த மனு: மதச்சார்பற்ற கூட்டணி எம்.பிக்கள் அதிரடி


இதில் அவர் உடல் முழுவதும் தீப்பற்றியது. பின்னர் அவர் அருகிலிருப்பவர்களால் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று 2017 டிசம்பர் 1-ந் தேதி அவர் வீடு திரும்பினார். ஆனால் பலத்த காயங்கள் சரியாகத நிலையில் அவர் 4-ந்தேதி உயிரிழந்தார்.


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் சேர்த்துடுங்க... இதுதான் டைம்! - கெடு கொடுத்த தலைமை தேர்தல் அதிகாரி


இந்த சம்பவம் குறித்து அவருடைய தாய் பாத்திமாராணி உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பிரிதிவிராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சுகுமாறன் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணையை தொடர்ந்து மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா நேற்று இறுதி தீர்ப்பு கூறினார்.


அதில், லாரன்சை கொலை செய்த பிரிதிவிராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து பிரிதிவிராஜை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண