தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் கோரத்தாண்டவம் அதிகமாகி இருந்தது. இந்த நிலையில் வைரஸ் தொற்றால் பல்வேறு உயிரிழப்புகளும் நிகழ்ந்தது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக கோவாக்சின், கோவிசீல்ட் உள்ளிட்ட தடுப்பூசி மருந்துகள் கண்டறியப்பட்டு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பரிந்துரை செய்து வந்தது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும் சுகாதாரத்துறை சார்பாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.


Thalapathy 67: சமந்தா வில்லி.. மும்பை தாதா.. ’தளபதி 67’ இந்த படத்தோட 2ஆம் பாகமா? கசிந்த தகவல்கள்!




அந்த வகையில் தேனி மாவட்டத்தில் 33-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 671 இடங்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. மாவட்டத்தில் 671 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம்கள் மூலம் 60 ஆயிரத்து 390 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு தேவையான தடுப்பூசி மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம்கள் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.




கூட்டத்தில் ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கி, முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


‛இவ்வளவு மதுபானமா...’ வாங்கிக் குவித்த TTF வாசன்... அந்தமானில் வெளியான அந்தரங்கம்!




பாஜக அரசை எதிர்த்து போராடினால் உடனே பொய் வழக்கு போட்டு கைது - முன்னாள் முதல்வர் நாராயணசாமி


முன்னதாக, தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அரசின் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கி, பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடர் கால மீட்பு மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண