தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் கூடலூரை அடுத்த லோயர்கேம்ப் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர், குமுளி, கூடலூர் வடக்கு, தெற்கு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் கஞ்சா வழக்குகள் தொடர்பான  நீதிமன்றத்திற்கு செல்லும் அலுவலக பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.


Kiss day: கிஸ் டே.. காதலே இல்ல, அப்புறம் எங்க முத்தம்.. மீம்ஸ்களில் ஆதங்கத்தை கொட்டும் சிங்கில்ஸ்




இந்தநிலையில் நல்லதம்பி  நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்ற கஞ்சாவை மறைமுகமாக எடுத்து கஞ்சா வியாபாரிகளுக்கு விற்பனை செய்ததாக கூடலூர் காவல் நிலைய ஆய்வாளர் பிச்சையாண்டிக்கு  தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து உத்தமபாளையம் காவல் துணைக்கண்காணிப்பாளர்  மதுகுமாரிடம், ஆய்வாளர் பிச்சையாண்டி புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்துமாறு கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு காவல் துணைக்கண்காணிப்பாளர்  உத்தரவிட்டார்.


Gold Rate: ஹேப்பி நியூஸ் பெண்களே... குறைந்தது தங்கம்! இன்றைய நிலவரம் என்ன?


இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கடந்த மாதம் ஜனவரி 15-ந்தேதி போலீசார் பறிமுதல் செய்த கஞ்சாவை நல்லதம்பி மதுரை நீதிமன்றத்தில்  ஒப்படைப்பதற்காக எடுத்துசென்றுள்ளார். அப்போது அந்த கஞ்சாவில் 250 கிராம் அளவு எடுத்து சின்னமனூரை சேர்ந்த தோட்ட தொழிலாளியான கணேசன் என்பவரிடம் கொடுத்துள்ளார். அவர், சின்னஓவுலாபுரம் இந்திராகாலனியை சேர்ந்த கூலித்தொழிலாளியான மற்றொரு நல்லதம்பியிடம் கஞ்சாவை கொடுத்ததாகவும், மற்றொரு நல்லதம்பி, அந்த கஞ்சாவை விற்பனை செய்வதற்காக எரசக்கநாயக்கனூர் பசும்பொன் தேவர் நகரை சேர்ந்த மணிகண்டனை பேசியுள்ளார்.


Prabhakaran: பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்- பழ . நெடுமாறன் பரபரப்பு பேட்டி


மணிகண்டன், அதே ஊரை சேர்ந்த சரவணகுமாரிடம் கஞ்சாவைவும் விற்றுள்ளார். இவ்வாறு தொடர்ந்து கஞ்சா பொட்டலங்கள் கைமாறி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்றதாக காவலர் நல்லதம்பி, கணேசன், மற்றொரு நல்லதம்பி, மணிகண்டன், சரவணக்குமார் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இந்த நிலையில் காவலர் நல்லதம்பி கஞ்சா வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தொடர்பான தகவல் காவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கஞ்சா விற்பனைக்கு துணை போனதாக நல்லதம்பியை பணியிடை நீக்கம் செய்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண