தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்திபெற்ற கெளமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அக்னி சட்டி, காவடி, ஆயிரம் கண்பானை, மாவிளக்கு, கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
மேலும் இந்த திருவிழாவை காண தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6-ந் தேதியில் இருந்து மே 13-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.
திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பொழுது போக்கிற்காக இயந்திர ராட்டினம் நடத்துதல் உள்பட கண்மலர், உணவுக்கூடம், முடி காணிக்கை ஆகியவைகளுக்கான ஏலம் கோவில் அலுவலகத்தில் நடைபெற்றது.
NEET UG Registration: அலர்ட் மாணவர்களே… நீட் தேர்வு விண்ணப்பிச்சாச்சா? நாளையே கடைசி- இதோ Guide!
இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார். வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் நாராயணி, ஆய்வாளர் கார்த்திகேயன், மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏலத்தில் ஏலதாரர்கள் சக்தி, சதீஸ்குமார், பாபு, குணசேகரன், தங்கத்துரை, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ராட்டினம் நடத்துதல் ஏலத்தை ரூ.2 கோடியே 94 லட்சம் என கோவில் நிர்வாகம் நிர்ணயித்திருந்தது. இந்த தொகையில் ஏல கேள்வி யாரும் கேட்காததால், ராட்டினம் ஏலத்தின் போது கோவில் நிர்வாகம் பத்தாயிரம், பத்தாயிரமாக குறைத்து ரூ.2 கோடியே 93 லட்சத்திற்கு தொகை நிர்ணயித்தது.
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
இந்த தொகைக்கும் ஏலம் எடுக்க யாரும் முன் வராததால் ராட்டினம் ஏலம் மறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் கண்மலர் ஏலத்தை ரூ.5 லட்சத்து 10 ஆயிரத்திற்கு பிரபு என்பவரும், உணவு கூடம் ஏலத்தை ரூ.33 லட்சத்து 14 ஆயிரத்திற்கு சதீஷ்குமார் என்பவரும், முடி காணிக்கை ஏலத்தை ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மாயி என்பவரும் ஏலம் எடுத்துள்ளனர். இருப்பினும் ராட்டினம் ஏலத்தை எடுக்க யாரும் முன் வராததால் பரபரப்புடன் தொடங்கிய சித்திரை திருவிழா நிகழ்வுகளுக்கான ஏலம் சாதாரணமாக முடிந்தது.