எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளிலும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளிலும் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்தத் தேர்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் சுருக்கம் ஆகும்.
தேர்வு எப்போது?
2025ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மார்ச் 7) கடைசித் தேதி ஆகும்.
விண்ணப்பிக்க என்ன தகுதி?
- சம்பந்தப்பட்ட தேர்வர், 12ஆம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
- நீட் இளங்கலைத் தேர்வை எழுத, விண்ணப்பிக்கும் தேர்வர்களின் வயது, மாணவர் சேர்க்கையின்போது 17 நிறைவு அடைந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் உச்ச வயது வரம்பு எதுவுமில்லை.
- விண்ணப்பதாரர்கள் வேதியியல், இயற்பியல், உயிரியல்/ உயிர் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தனித்தனியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிற வகைகளில் அனுப்பப்படும் விண்ணப்பப் படிவம் ஏற்கப்படாது.
- ஒரு தேர்வர் ஒரு படிவத்தை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட படிவம் இருந்தால், அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படும் அல்லது நிறுத்தி வைக்கப்படும், அல்லது தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும்.
- இ மெயில் முகவரி, மொபைல் ஆகியவை உங்களுடையதாக அல்லது உங்கள் பெற்றோர்/ பாதுகாவலரின் விவரமாக இருக்க வேண்டும். அந்த எண், இ மெயில் முகவரிக்குத்தான் விவரங்கள் அனுப்பப்படும்.
- அனைத்து கேள்விகளுக்கும் உரிய விடையை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் விண்ணப்பம் ஏற்கப்படாது.
- வருங்காலத் தேவைக்காக, கட்டணம் செலுத்தியது உள்ளிட்ட முக்கிய விவரங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2 முறை விண்ணப்பக் கட்டணம் தவறுதலாக செலுத்தப்பட்டு விட்டால், என்டிஏ சம்பந்தப்பட்ட தேர்வருக்கு கட்டணத்தைத் திரும்பச் செலுத்திவிடும்.
- ஏற்கெனவே முன்பதிவு செய்த தேர்வர்கள், https://examinationservices.nic.in/neet2025/root/CandidateLogin.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFcFR+natXIEjJ1rCf6DMgOr/hcv4rs34T5gNmvCx/R+a என்ற இணைப்பின் மூலம் வின்ணப்பிக்க வேண்டும்.
- முதல் முறையாக விண்ணப்பிக்கும் நபர்கள், https://examinationservices.nic.in/NEET2025/Registration/Instruction.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்த பிறகே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முன், தேர்வர்கள் என்டிஏ அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2025/02/2025020754.pdf என்ற இணைப்பில் இந்த அறிவிக்கையை பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வுக் கட்டணம்
பொதுத் தேர்வர்களுக்கு – ரூ.1,700
பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர், ஓபிசி க்ரீமி லேயர் அல்லாதோர்- ரூ.1,600
எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ மூன்றாம் பாலினத்தவர் – ரூ.1000
வெளிநாட்டுத் தேர்வர்கள் – ரூ.9,500
ஹால் டிக்கெட் எப்போது?
ஏப்ரல் 26ஆம் தேதி அன்று தேர்வு மையங்கள் குறித்த விவரம் வெளியிடப்படும். ஹால் டிக்கெட்டை மே 1ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்றும் ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகலாம் எனவும் என்டிஏ தெரிவித்துள்ளது.
முழு விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2025/02/2025020754.pdf