தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் பெயரில் மர்ம நபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கினார். அதில் மாவட்ட ஆட்சியரின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தி அரசு அலுவலர்களிடம் நலம் விசாரிப்பது போன்று குறுஞ்செய்திகள் அனுப்பி பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ஆட்சியர் முரளிதரனுக்கு கிடைத்தவுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.


AIADMK single leadership : ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடினால் சந்திக்கத் தயார்.. அதிரடிக்கு தயாரான இபிஎஸ்!




அதன்பேரில் தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்நிலையில் தேனி ஆட்சியரின் பெயரில் நேற்று மேலும் ஒரு மர்ம நபர் மற்றொரு தொலைபேசி எண்ணில் போலியான வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்றார். மேலும் அந்த நபர் ஆட்சியரின் பெயரில் போலியான உத்தரவு ஒன்றை தயாரித்தும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


Chennai: தன் விருப்பத்தின் படி பாலியல் தொழிலில் ஈடுபட்டால் விட்டுடுங்க...! - காவல்துறைக்கு சென்னை நீதிமன்றம் அறிவுரை..!




தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் புகைப்படத்தை முகப்பு படமாக கொண்டு 8088765749 என்ற எண்ணில் இருந்து வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோன்று தற்போது மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை முகப்பு படமாக வைத்து 7207912008 என்ற எண்ணில் இருந்து மர்ம நபரால் பலருக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அந்த குறுஞ்செய்திகளில் அரசு அலுவலர்களை நலம் விசாரிப்பது போன்றும், இணையதள வர்த்தகத்திற்கு பணம் அனுப்பக் கேட்டும் தகவல்கள் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், சில ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அரசு திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதற்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் என்றும் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் போலியான ஒரு உத்தரவை மாவட்ட ஆட்சியர் அனுப்புவது போல் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளதாகவும் தெரிய வருகிறது. இதுதொடர்பாக உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.





மாவட்ட ஆட்சியர் அரசால் வழங்கப்பட்ட (சி.யூ.ஜி. எண்) 9444172000 என்ற செல்போன் எண் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே வேறு எண்ணில் இருந்து ஆட்சியரின் பெயரில் தவறான செய்திகள் மற்றும் தவறான வேண்டுகோள்கள் ஏதேனும் வந்தால் ஊராட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆட்சியரின் பெயரில் மீண்டும் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண