தமிழகம் முழுவதும்  நியாயவிலைக்கடைகளில் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வாங்கப்பட்டு வருகின்றன. பயோமெட்ரிக் கருவியில் ஸ்மார்ட் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினரின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் முறைகேடுகள் தடுக்கப்படுவதால் இந்த நடைமுறை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் நியாயவிலைக்கடைகளில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், முதியோர்களுக்கு கை விரல் ரேகை பதிவு சரியாக ஆகாததாலும் பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. முதியோர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.




 


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி மர்மமான முறையில் தீயில் கருகி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


கைவிரல் ரேகை பதிவு சரியாக பதிவாகாமல் ரேசன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை உருவாகியது. இதை தவிர்க்கவும், முதியோர்கள் கைரேகை வைப்பதில் இருந்து விலக்கு பெறுவதோடு, கடைக்கு வர முடியாதவர்கள் யாரேனும் வேறு நபர்கள் மூலம் பொருட்கள் வாங்கிக் கொள்ள வழிவகை ஏற்படும் வகையில் அரசு புதிய உத்தரவை  பிறப்பித்துள்ளது.




'இலங்கையை வென்ற ராஜராஜ சோழன்' - ஆதாரத்தை கண்டு பிடித்த அரசுப்பள்ளி மாணவி


அதன்படி, கை விரல் ரேகை பதிவு சரியாக செய்ய முடியாதவர்கள் மற்றும்  நியாய விலைக்கடைக்கு வர முடியாத முதியோர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடையில் உரிய படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் கை விரல் ரேகை வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில்  நியாயவிலைக்கடைகளில் இந்த விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன.




மாவட்டத்தில் மொத்தம் 4,25,300 ஸ்மார்ட் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 2,700 ஸ்மார்ட் ரேஷன் கார்டுதாரர்கள் இதுவரை கை விரல் ரேகை பதிவில் இருந்து விலக்கு கேட்டு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு கை விரல் ரேகை வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மேலும் முதியோர்கள் இதுபோன்ற கை விரல் ரேகை வைப்பதில் சிரமம் இருந்தால் அவர்களும் உரிய விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயன்பெறலாம். எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கொடைக்கானல் பாச்ச‌லூர் ம‌லைக்கிராம‌த்தில் ம‌ர்ம‌மான‌ முறையில் சிறுமி உயிரிழ‌ந்த‌ சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என புகார்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண