திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் திண்டுக்கல் தனியார் மீட்டிங் ஹாலில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. அதில் அளித்த பேட்டியில், கிராம நிர்வாக அலுவலர் கொலை  அரங்கேறி உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு காரணம் மது தான், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களுக்கு காரணம் கஞ்சா தான்.


Online game: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிரான வழக்கு... நீதிமன்றம் சரமாரி கேள்வி? தடை நீக்கப்படுமா?




கொரோனாவுக்கு பிறகு தான் கஞ்சா தற்பொழுது உச்சகட்டமாக விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் எல்லைகளிலிருந்து கஞ்சா வரப் பெறுகிறது. கஞ்சா பவுடர், கஞ்சா எண்ணெய், கஞ்சா பேஸ்ட்,  கஞ்சா சாக்லேட் கஞ்சா ஸ்டாம்பு என கஞ்சாவில் பலவித வடிவங்களில் வெளிவருகின்றன. கஞ்சா மட்டும் அல்ல அபின், ஹாக்கின், ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் இலங்கை, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பஞ்சாப் எல்லை, பர்மா வழியாக வந்து கொண்டிருக்கிறது.


Amazon Layoff : பணிநீக்கத்தை மீண்டும் கையில் எடுத்த அமேசான்... மேலும் 9 ஆயிரம் பேருக்கு ஆப்பு...!



தமிழக முதலமைச்சர் போதைப் பொருட்களை ஒழிக்க சிறப்பு கவனம் எடுக்க வேண்டும். மாதந்தோறும் இது சம்பந்தமான மீட்டிங்குகள் வைக்க வேண்டும். போதை பொருள் தடுப்புச் சட்டத்தில் கடைசியாக உள்ளவர்களை மட்டுமே கைது செய்யப் போகிறார்கள் முக்கியமானவர்கள் கைது செய்யப்படுவதில்லை. 


எல்லோருக்கும் அரசியல் பின்புலம் உள்ளது. பாலியல் சீற்றங்களுக்கு காலம் இந்த போதைகள் தான் இதை ஒழித்தால்தான் சீராக இருக்கும். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தான் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிடுவோம். திராவிட கட்சிகள் மொழி, மொழிப்போரை வைத்து தான் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என ஆட்சிக்கு வந்தார்கள் ஆனால் தற்பொழுது எங்கும் மது எதிலும் மது எனது தமிழகத்தில் நிலை வருகிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக உடன் ஒருமித்த கருத்துள்ள கட்சி எல்லாம் இணைந்து கூட்டணி அமைப்போம்.


Andhra Pradesh Farmer: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் கான்வாயை மறித்த விவசாயிகள்… வைரலாகும் வீடியோ! என்ன காரணம்?



அதற்கான வியூகத்தை 2024 பாராளுமன்றத் தேர்தலில் எடுப்போம். மக்கள் புதுமையும் மாற்றத்தையும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை பெரும் வகையில் எங்கள் செயல்திட்டம் இருக்கிறது. கொடநாடு கொலை வழக்கில் சிபிஐ வைத்தாலும் பரவாயில்லை யார் கொலையாளி என உண்மை வெளிவர வேண்டும். மக்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ள விசாரிக்கட்டும் என பேசினார்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண