ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன இது குறித்து ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு தகவல் இங்கே.

 

ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

 

Southern Railway - திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் பாதை மின் தடம் மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்செந்தூரில் இருந்து மாலை 04.25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் - திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயில் (06676) அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

 


 

தீபாவளி நாள் தவிர மற்ற நாட்களில் ரத்து செய்யப்படுகிறது

 

பாலக்காடு - திருச்செந்தூர் முன்பதிவிலாத ரயில் (16731) அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் தாழையூத்து - திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.  திருச்செந்தூர் - பாலக்காடு முன்பதிவில்லாத ரயில் (16732) அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.45 மணிக்கு 85 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும். அக்டோபர் 15, நவம்பர் 17, 20, 21, 22 ஆகிய நாட்களில் திருநெல்வேலி - செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில் (06687) திருநெல்வேலியில் இருந்து மதியம் 01.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 02.40 மணிக்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.