சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜரான யூடியுபர் சவுக்கு சங்கருக்கு பிணை


யூடியூபர் சவுக்கு சங்கர்


பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா கொடுத்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சவுக்கு சங்கர் மீது தேனி மாவட்ட காவல் துறையினர் கஞ்சா வழக்கு பதிவு செய்த நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கரை தேனி காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், அந்த வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, சவுக்கு சங்கரின் தாயார் கமலா வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் தேனியில் குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படியான நிலையில், ”தான்... சிறையில் இருப்பதற்கு உதயநிதி தான் காரணம்” என சவுக்கு சங்கர் சிவகங்கையில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிணை வழங்கி நீதிபதி உத்தரவு


பல்வேறு வழக்குகளில் கைதான  யூடியுபர்  சவுக்கு சங்கர்  இன்று சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவருக்கு சொந்த பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.  பெண் காவலர்களை இழிவாக பேசியதாக தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் சிவகங்கை அருகே  மதகுபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் சிவகங்கை சைபர் கிரைம் பிரிவில் கடந்த 6.5.2024 -ல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில்  சவுக்கு சங்கரை போலீஸார்  கைது செய்து சிவகங்கை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இந்த வழக்கில் அவரை சொந்த பிணையில் நீதிபதி ஜெ.ஆப்ரின் பேகம் விடுதலை செய்தார்.


சவுங்கு சங்கர் செய்தியாளர்களிடம்


இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...,”
 தன் மீது புதுப்புது வழக்குகளில் தினமும் கைது செய்யப்பட்டு வருகிறேன். எல்லா வழக்களுக்கும்  உதயநிதி ஸ்டாலின் தான் காரணம். உதயநிதி நடத்தும் கார் பந்தயம் முடிவு பெறும் வரை, நான் வெளியில் வராத வகையில் தினசரி புதுப்புது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருதாகவும் குற்றம்சாட்டினார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Hc: டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது பாய்ந்த வழக்கு: தென்மண்டல ஐ.ஜிக்கு நீதிமன்றம் பாராட்டு !


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - NIRF Ranking 2024: செம்ம சென்னை; என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 6ம் ஆண்டாக ஐஐடி சென்னை முதலிடம்!