மதுரையின் பிரபல தயாரிப்பான சுங்கடி சேலைகளை மீண்டும் "ஒரு நிலையம் ஒரு பொருள்" திட்டத்தின்கீழ் மதுரை ரயில் நிலையத்தில் விற்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக தகுதியுள்ள தயாரிப்பாளர்களிடமிருந்து மதுரை ரயில்வே கோட்ட வர்த்தக பிரிவு விருப்பமனு கோரியுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Railway: கொரோனாவிற்கு பிறகு மீண்டும் ரயில்நிலையங்களில் நின்று செல்லும் ரயில்கள்... மே 6 முதல் ஆரம்பம்
பூர்த்தி செய்த விருப்ப மனு விண்ணப்பங்களை இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மதுரை கோட்ட வர்த்தக பிரிவு அலுவலகத்தில் அளிக்கலாம். அன்று மாலை 03.30 மணிக்கு தகுதி பெற்ற நபர் அல்லது நிறுவனம் தேர்வு செய்து அறிவிக்கப்படும். தேர்வு பெற்ற நிறுவனத்திற்கு மதுரை ரயில் நிலையத்தில் மின்சார வசதியுடன் கூடிய பயணிகள் பார்வையில் படும் இடம் 15 நாட்களுக்கு இலவசமாக அளிக்கப்படும்
மேலும் விவரங்களுக்கு என்ற 9003862967 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் ஷவர்மா கடைகளில் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு - பழைய சிக்கன் கறிகள் பறிமுதல் !