தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தலைச் சேர்ந்தவர் முத்துகுமார் இவர் உட்பட சிலர், சட்டவிரோதமாக ஆற்று மணலை விவசாயத்திற்கு பயன்படுத்தும் டிராக்ட்டரில் அள்ளி சென்றதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாயர்புரம் போலீசார் வழக்கு பதிந்தனர். சிலர் இவ்வழக்கில் ஜாமின், முன்ஜாமின் பெற்றனர். இவ்வழக்கில் தொடர்புடையோர், தனி நபர் பட்டா நிலத்தில் சட்ட விரோதமாக மணல் எடுத்தது தொடர்பாக, துாத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க, 2019ல் சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.



இதை சற்று கவனிக்கவும் -Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

 

சாயர்புரம் போலீசார் பதிவு செய்த வழக்கில், 22.7.2021-ல் முத்துகுமார் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமின் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.  இந்நிலையில் நீதிபதி பி.புகழேந்தி உத்தரவு...,”முத்துகுமார் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. துாத்துக்குடி கலெக்டர் விசாரித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் திருட்டு வழக்கில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையை, துாத்துக்குடி எஸ்.பி., கண்காணிக்க இந்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு மணல் எடுக்கப்பட்டது, அது எத்தகைய கனிமம் என விசாரித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.





இந்நீதிமன்றம் 2019- ல் உத்தரவிட்டும், இதுவரை உண்மையை கண்டறியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லை.விசாரணையை கண்காணிக்க எஸ்.பி., தவறி விட்டார். அவர் மீது, இந்நீதிமன்றம் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கிறது. அவர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வரும் 22க்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என மாண்புமிகு நீதிபதிகள் உத்தரவிட்டார்.


விசாரணையை கண்காணிக்க தவறியதாக, துாத்துக்குடி எஸ்.பி., மீது தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கை நீதிமன்றம் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் கீழ் உள்ள 13 மாவட்டங்களில் மணல் அள்ள தடை உள்ளது, இந்நிலையில் பல மாவட்டங்களில் மணல் கொள்ளை ஜோராக நடைபெறுகிறது. எனவே இவர்கள் மீது காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.