உசிலம்பட்டி அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட பகுதியை உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்களே இறங்கி சரி செய்த விவகாரம் - நகராட்சி சேர்மன் மற்றும் நகராட்சி பொறியாளர் நேரில் ஆய்வு செய்தனர்.


உசிலம்பட்டியில் சாக்கடை பிரச்னை


மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்கள் சந்துக்கும் இடமாக மதுரை உசிலம்பட்டி உள்ளது. இதனால் உசிலம்பட்டி பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள இடங்களில் சாக்கடை வீசி வெளியேறுகிறது. இங்கு பாதுகாப்பு இல்லாமல் பணியாளர்கள் வேலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


கால்வாய் ஊரணியில் தேங்குறது


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் மதுரை ரோட்டில் உள்ள 5,6,7,8,9 உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வார்டு பகுதியிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் கால்வாய் மூலம் கொங்கபட்டி ஊரணியில் சென்று தேங்கி வருகிறது., முறையான வடிகால் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அவ்வப்போது கொங்கபட்டி பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் சாலையோரம் ஆறாக ஓடும் சூழல் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.


உபகரணங்கள் இன்றி சுத்தம் செய்த வேலை ஆட்கள்


கடந்த ஒரு வாரமாக வழக்கம் போல் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையோரம் ஆறாக செல்லும் நிலையில், நேற்று முன்தினம்  கொங்கபட்டி பல்க் அருகில் உள்ள சாக்கடை கால்வாய் அடைப்பை உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்கள் இறக்கி சாக்கடை கால்வாயில் இருந்த அடைப்பை சரி செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து நமது abpnadu இணைய செய்தியில் - சாக்கடை கழிவுகளுக்குள் மூழ்கி சுத்தம் செய்த தொழிலாளி; மதுரையில் அதிர்ச்சி என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டோம். 


விரைவில் பிரச்னை சரி செய்யப்படும்


இதன் எதிரொலியாக உசிலம்பட்டி நகராட்சி சேர்மன் சகுந்தலா கட்டபொம்மன், நகராட்சி பொறியாளர் பட்டுராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி சேர்மன் சகுந்தலா கட்டபொம்மன், உசிலம்பட்டி பகுதியின் நீண்ட நாள் கோரிக்கை, நான்கு பகுதியிலிருந்தும் வெளியேறும் சாக்கடை நீரை ஓர் இடத்தில் சுத்திகரிப்பு செய்து விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்திற்கான அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது என்றும், நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.,


நிரந்தர தீர்வு காண கோரிக்கை


மேலும் இதுகுறித்து உசிலம்பட்டி பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், "மதுரை மாவட்டம் வறட்சியான பகுதியாக பார்க்கப்படுகிறது. இதைத் தாண்டி விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் சில இடங்களில் கண்மாய், குளங்களில் சாக்கடை கலப்பது வேதனை அளிக்கிறது. தற்போது முதற்கட்டமாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்” என்றனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - "எந்த நாகரிக சமூகமும் இதை ஏத்துக்காது" கொல்கத்தா சம்பவம் குறித்து மனம் நொந்து பேசிய குடியரசு தலைவர்!


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ADMK Protest : "தஞ்சாவூரில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டம் போர்க்களமானது" பெண் போலீசுக்கு கையில் ரத்த காயம்!