நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர் மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி பகுதியை சேர்ந்த மீனவர் வீரவேல் (30) காயமடைந்த காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் தங்கி கடலில் மீன் பிடிப்பிற்காக  ஒரு படகில் பத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். மீனவர்கள்  கோடியாக்கரை ராமேஸ்வரம் இடையே வடக்கு கடல் பகுதியில்  மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். 



 

இந்த துப்பாக்கி சூட்டில் காரைக்காலில் இருந்து சென்ற மீன் பிடி படகின் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதில்  படகில் இருந்த மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேல் (32) என்பவருக்கு இடது இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் இரண்டு  துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்தார். இதனை அறிந்த இந்திய கடற்படையினர் உடனடியாக உச்சப்புளி ஐ.என்.எஸ் பருந்து கடற்படை முகாமிற்கு தகவல்  அளித்தனர். இதையடுத்து உச்சிப்புளி கடற்படை தளத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேரடியாக நடுக் கடலுக்கு சென்று படுகாயமடைந்த மீனவரை மீட்டு  ஐ.என்.எஸ் பருந்து கடற்படை  முகாமுக்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.



 

பின்னர் கடற்படை முகாமில் இருந்து  சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம்  அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அண்ணாபேருந்து நிலைய பகுதியில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு ஆம்புலன்ஸ் மூலமாக மீனவர் வீரவேல் அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மீனவர் வீரவேலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மீன் வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் வருகை தந்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

 



 

தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் மயிலாடுதுறை மீனவர் காயமடைந்து உள்ளார். காரைக்காலில் இருந்து கடந்த 15ஆம் தேதி 10 மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க  சென்றுள்ளனர். இன்று காலை தெற்கு மன்னார் வளைகுடா அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மயிலாடுதுறையைச் சேர்ந்த வீரவேலு என்ற மீனவர் காயமடைந்து உள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது மேல் சிகிச்சைக்காக  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள மீனவர் தற்பொழுது நலமுடன் உள்ளார் அவர்களுக்கான சிகிச்சை மருத்துவமனையில் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்திய கடற்படை  தூப்பாக்கிச் சூட்டில் பெல்லட்  மீனவர் மீது பட்டத்தில் 5 இடங்களில் காயம் உள்ளது. இந்திய கடற்படையே தமிழக  மீனவர்களின் மீது நடத்தி இருக்கும் தாக்குதல் மிகப்பெரிய வருத்ததிற்குரிய விஷயமாக உள்ளது.  இந்தியப் பிரதமருக்கு தமிழகத்தின் முதல்வரின் வாயிலாக இந்தியக் கடற்படையின் செயலுக்கு  கண்டனம் தெரிவிக்கப்படும். நடந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை செய்யப்படும். விசாரணை ஆணையம் அமைக்கப்படுமா எனக்கேட்டதற்கு முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.