மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ளது. கட்ரா பாளையம் பகுதி் இங்கு  முழுவதும் காலணி விற்பனை (செருப்பு) கடைகள் முழுவதுமாக காணப்படும். இதனிடையே ஆங்காங்கே சில குடியிருப்புகளும் இருந்து வருவதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
 

இந்தநிலையில் கடந்த 25ஆம் தேதி நள்ளிரவில் கடை ஒன்றின் முன்பாக வாடிக்கையாளர்கள் கடைக்கு நடந்து செல்வதற்காக வைக்கப்பட்டிருக்கின்ற இரும்பு நடைபாதை ஒன்றை ட்ரை சைக்கிளில் வந்த இருவர் தூக்கி ட்ரை சைக்கிள் போட்டுவிட்டு அதனை துணியால் மூடி எடுத்து செல்கின்றனர்.
 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

இந்த சிசிடிவி காட்சிகள்  சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சமூக வலைதளவாசிகள் இதையெல்லாமா திருடுவங்கனு  என கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.