இந்த ஆண்டின் கடைசி முகூர்த்தம் என்பதால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு- மல்லிகை பூ கிலோ 3 ஆயிரத்திற்கு விற்பனை. வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கடைசி முகூர்த்தம்:







மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தென்மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் வரவழைக்கப்பட்டு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான கடைசி முகூர்த்தம் என்பதால் பூக்களின் வரத்து குறைவாக இருப்பதாலும் மதுரை மல்லிகை பூ உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

 



 

அதன்படி மதுரை மல்லிகை - நேற்று 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ஆயிரம் ரூபாய் கூடுதலாக 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று  முல்லை பூ - நேற்று 700 ரூபாய்க்கும், இன்று ஆயிரம் ரூபாய்க்கும்,  பிச்சி பூ நேற்று 600 ரூபாய்க்கும், இன்று 700 ரூபாய்க்கும்,

 


 



சம்மங்கி நேற்று கிலோ -100 ரூபாய்க்கும் இன்று 200 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ்- கிலோ 150்ரூபாய்க்கும், செண்டுமல்லி -150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மற்ற பூக்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸை முன்னிட்டு வரும் நாட்களில்  பூக்களின் விலை அதிகரிக்கும்  எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.






மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Bigg Boss Tamil: டிக்கெட் டூ ஃபினாலே போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த அர்ச்சனா, விஜய்: சம்பவம் செய்த தினேஷ்


' இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rajinikanth Birthday: ரஜினி சிலைக்கு திருவாச்சியும் நாக கிரீடம்; சிறப்பு வழிபாடு நடத்திய ரஜினியின் தீவிர பக்தர்