மானாமதுரையில் கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டத்தின் துவக்க விழாவை முன்னிட்டு  முதல்வரின் படத்தினை கோலமாக வரைந்து பொதுமக்களுடம் கும்மி பாட்டுப் பாடி நடனமாடிய எம்.எல்.ஏ.,

 

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்பதலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்து இருந்தது. அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஒரு கோடியே 6 லட்சம் பேர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ளவர்களாக அரசு அறிவித்தது. மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15ம் தேதி ஆன இன்று,  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 





 தமிழக முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கலைஞரின் மகளிர் உதவித்தொகை திட்டத்தை தமிழகம் முழுவதும் துவக்கி வைப்பதை கொண்டாடும் விதமாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த  மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், சிலைக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் உருவப் படத்தினை கோலமாக வரைந்து அசத்தினார். மேலும் மகளிர் உதவித்தொகை திட்டத்திற்கு நன்றி கூறும் விதமாக நடைபெற்ற கோல போட்டியை துவக்கி வைத்து அனைவருக்கும் பரிசுகளையும், பாராட்டினையும் தெரிவித்தார். தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் கும்மி பாட்டுப் பாடியவாரு, நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தார். இதனை பேருந்தில் பயணிப்பவர்களும், மானாமதுரை மக்களும் ரசித்து மகிழ்ந்தனர்.



 


இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், ”திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் மாதம் ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார். இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நேற்றே பலர் வங்கி கணக்குகளில் ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். முதலமைச்சர் சொன்னதை செய்துள்ளார். மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். மானாமதுரை வீதியில் உள்ள வீடுகளில் கோலமிட்டு உரிமைத்தொகை வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி என அவருக்கு நன்றி தெரிவித்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.




கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக முதல்முறையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நிதிச்சுமை காரணமாக இத்திட்டம் தொடங்கப்படாமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மகளிர் உரிமைத்தொகை திட்டம் இன்று தொடக்கம்.. வீடுகளில் கோலமிட்டு நன்றி தெரிவித்த பெண்கள்!


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களை எரித்தாரா கோவை மேயரின் தம்பி..? - நடந்தது என்ன?