திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரவீன் (வயது 38). இவர், தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று  நண்பகல் இவர், ஒட்டன்சத்திரத்தில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் சின்னாளப்பட்டியை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் நேற்று தேவதானப்பட்டி அருகே உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர்.


Online Rummy: ஆன்லைன் ரம்மியால் மீண்டும் சோகம்..! ரூ. 4 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை - திருச்சியில் அதிர்ச்சி




பின்னர் அங்கிருந்து அவர்கள் வத்தலக்குண்டு வழியாக சின்னாளப்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். செம்பட்டி அருகே, வத்தலக்குண்டு சாலையில் உள்ள கூலம்பட்டி பிரிவில் வந்தபோது சுற்றுலா வேனும், பிரவீனின் காரும் நேருக்குநேர் மோதின. இந்த விபத்தில் நிலை தடுமாறிய சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது.  அப்போது காரின் இடிபாடுகளில் சிக்கிய பிரவீன் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுற்றுலா வேனில் வந்த சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.


வழக்குகளை கையாள பயிற்சி அளிப்பதே முதல் வேலை: விலங்கு வதை வழக்குகளுக்காக தமிழ்நாடு அரசு நியமித்த எஸ்பி!


இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செம்பட்டி  காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் உயிரிழந்த பிரவீனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான பிரவீனுக்கு திவ்யா (35) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




விளையாட்டாக நடந்த சண்டையில் மனமுடைந்து, பள்ளி மாணவன் விஷம் அருந்தி தற்கொலை.


திண்டுக்கல் மாவட்டம் கே.கீரனூரை சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மனைவி சிவப்பிரியா. இந்த தம்பதிக்கு யோகேஷ் (வயது 14), கவியரசன் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் யோகேஷ், நீலாகன்னிவலசு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  நேற்று முன்தினம் யோகேசுக்கும், அவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அண்ணனை, கவியரசன் விளையாட்டாக திட்டியதாக தெரிகிறது.




அப்போது அவர்களை பெற்றோர் சமரசம் செய்தனர். நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை எடுத்து யோகேஷ் குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கே.கீரனூர் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவன் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கள்ளிமந்தையம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விளையாட்டாக நடந்த சண்டையில் மனமுடைந்து, பள்ளி மாணவன் தற்கொலை செய்து ெகாண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண