பழனி அருகே தொப்பம்பட்டி பகுதியில் முயல்களை வேட்டையாட முயன்ற கரூர் மாவட்டத்தை சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்டோரை வனத்துறையினர் கைது செய்தனர். 


திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள தொப்பம்பட்டி பகுதியில் வேட்டைநாய்களுடன் பலர் சுற்றித்திரிவதாக பழனி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பழனி வனச்சரக அலுவலர் பழனிகுமார் தலைமையிலான வனத்துறையினர் தொப்பம்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாற்பதுக்கும் மேற்பட்டோர் வேட்டை நாய்களும் சுற்றி வந்தது தெரியவந்தது.


மாணவர்கள் பாதியில் வெளியேறினாலும் முழுக் கட்டணம் திருப்பித் தரணும்... யுஜிசி அதிரடி உத்தரவு!




அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த உள்ள பாதிரிப்பட்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பாரிவேட்டையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து பழனி வனச்சரக அலுவலர் பழனிகுமார் தலைமையில் வனத்துறையினர்  நடத்திய விசாரணையில் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு ஒரு சமூகத்தை சேர்ந்த இவர்கள் அனைவரும் ஆண்டுதோறும் பாரிவேட்டையில் ஈடுபடுவதும், இந்த ஆண்டு பழனி பகுதியில் பாரிவேட்டையில் ஈடுபட முயன்றதும்  தெரியவந்தது.


“நிறைய பேர் என் முதுகில் குத்தியிருக்காங்க! அத சொல்லி நான் வெளில தெரிய வேண்டாம்”: 8 தோட்டாக்கள் ஸ்ரீ கணேஷ்!




பாரிவேட்டையில் வேட்டையாடப்படும் முயல்களை திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரப்பூரில் உள்ள பொன்னர்-சங்கர் திருக்கோவிலில் வைத்து வழிபாடு நடத்துவதும் தெரியவந்தது. தொடர்ந்து 26 வேட்டை நாய்களுடன் 46 பேரை கைது செய்த வனத்துறையினர் பாரிவேட்டையில் ஈடுபடுவது சட்டப்படி தவறு என்றும், இனி வேட்டையாடக்கூடாது எனவும் எச்சரித்தனர். தொடர்ந்து வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் விதித்த வனத்துறையினர் கைது செய்யப்பட்டவர்களை எச்சரித்து அனுப்பினர்.


Ind vs WI, 3rd T20: சீறிப்பாய்ந்த சூர்யா... ஸ்விங்கில் பின்னிய புவி... இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!