Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு, விலை அதிகரித்தது. ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால், விற்பனை ரூபாய் ஒரு கோடிக்கு மேல் நடைபெற்றதாக சந்தை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


பக்ரீத் பண்டிகை 2024


உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத்துக்கு தனி இடம் உண்டு. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


இந்தாண்டு வரும் 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு திருப்புவனம் கால்நடை சந்தையில் 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.


களைகட்டும் கால்நடை சந்தை


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மெயின் ரோடு பகுதிகளில் வாரம் தோறும் செவ்வாய் அன்று கால்நடை சந்தை நடைபெறும். அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை ஆடு, கோழி, வாத்து, வான் கோழி முயல் உள்ளிட்டவைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள். சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனம் தாலுகாவில்தான் கால்நடைகள் அதிகளவு வளர்க்கப்படுகிறது. பச்சேரி, மணல்மேடு, பெத்தானேந்தல் அல்லிநகரம், பழையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடுகள் வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது.


- Premji Amaran wife: இவங்க தான் பிரேம்ஜி மனைவி... மணப்பெண் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு


விலைவாசி உயர்ந்தது


விவசாயிகள் தங்களது ஆடுகளை வாரச்சந்தையில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். தீபாவளி, ஆடி, சிவராத்திரி, ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட சுப தினங்களுக்கு கால்நடை சந்தை களை கட்டும். இதனால் பலரும் ஆடுகள் வாங்க சந்தையில் குவிந்திருந்தனர். இன்று அதிகாலை முதல் ஆடுகள் வரத்து அதிகளவு இருந்தது. காலை 8 மணி வரை 3ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. எடைக்கு ஏற்ப ஒரு ஆடு 15 முதல் 45 ஆயிரம் வரை ஆடு  விற்பனையாகின.


திருமணம், காதணி விழாக்களில் அசைவ விருந்திற்கு ஆட்டுக் கிடா வைத்து பயன்படுத்துவார்கள். தேவை அதிகரிப்பால் இந்த சமயத்தில் விலை அதிகரித்துள்ளது. இதே போல நாட்டுக் கோழிகளின் விலையும் உயர்ந்துள்ளது. நாட்டு கோழி கிலோ 200 ரூபாயில் இருந்து 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோழிகளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 


பக்ரீத் பண்டிகை  விற்பனை எப்படி?


மேலும் இது குறித்து ஆடு வியாபாரிகள் கூறுகையில்...,”வரும் 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை வருகிறது. இதனால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு, விலை அதிகரித்தது. ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால், விற்பனை ரூபாய் ஒரு கோடிக்கு மேல் நடைபெற்றுள்ளது” என தெரிவித்தனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிறுபான்மையினர் மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் - சேருவதற்கான தகுதிகள் என்னென்ன?


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மோடிக்கு லேட்டாக வாழ்த்து சொன்ன பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. என்ன மேட்டர்?