மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்காக முதல்வர் விரைவில் அறங்காவலர் குழுவை நியமிக்க உள்ளார், அறங்காவலர் குழு நியமனத்திற்கு பின்னர் மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்படும் என மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்தார்.


மதுரையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் நவீன இயந்திர செயல்பாடுகளை தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார். மதுரை மாநகராட்சிக்கு 30 இலட்சம் மதிப்பிலான நவீன இயந்திரத்தை தனியார் நிறுவனம் வழங்கியது. இதனையடுத்து நவீன இயந்திரத்தின் வழியாக பாதாள சாக்கடை கழிவுகள் அகற்றும் பணியினை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், ம்துரை மாநகராட்சியின் மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


 






பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில் "மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக விரைவில் திருப்பணிகள் தொடங்கப்படும். முதல்வர் விரைவில் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுவை நியமிக்க உள்ளார். பாதாள சாக்கடை அடைப்புகளை எடுத்தல், கழிவுகளை உறிஞ்சி எடுத்தல் மற்றும் அடைப்பு எதனால் ஏற்பட்டது என 3 பணிகளை செய்யும் கருவி மாநகராட்சி பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. சென்னையில் இருப்பது போல பாதாள சாக்கடை அமைப்புகளை சரி செய்ய சூப்பர் சக்கர் வாகனம் மதுரை மாநகராட்சிக்கு வாங்கப்படும், மதுரை மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு பல்வேறு வகையான புதிய நவீன இயந்திரங்கள் வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.


மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் குறித்து தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!




மனிதர்களே மனித கழிவை எடுக்க கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு, பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் போன்ற பணிகளில் வெளிநாடுகளில் மனிதர்கள் இறங்காமல் வரைபடத்தின் அடிப்படையில் பணிகள் செய்யப்படும், பாரம்பரியமிக்க பழமையான தமிழகத்தில் பல இடங்களில் வரைபடம் இல்லாததால் பணிகளை செய்ய முடியவில்லை, அவசரத்திற்காக தவறான வழியில் பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறக்கி விடப்படுகிறார்கள், விதிமுறைகள் இருந்தும் மனிதர்கள் மனித கழிவுகளை அள்ள பாதாள சாக்கடைக்குள் இறக்கி விடப்படுகிறார்கள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதாள சாக்கடை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்" எனக் கூறினார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குளறுபடி நான் எந்த மனுவும் கொடுக்கவில்லை” - குறுஞ்செய்தி வந்ததாக ஆர்.பி.உதயகுமார் அதிர்ச்சி


மேலும் செய்திகள் படிக்க - அமித்ஷாவிடமும், மோடியிடமும் சனாதனத்தை ஒழித்து விட்டோம் எனத் தைரியமாக சொல்ல முடியுமா? - செல்லூர் ராஜூக்கு உதயநிதி சவால்