திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாறைப்பட்டி கிராமம் தோட்டத்து குடியிருப்பில் வசித்து வருகின்ற மாரிமுத்து-கஸ்தூரி தம்பதியின் 10-வயது சிறுவன் முகேஷ்(10) அதே பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுவனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென மயங்கி விழுந்து கடுமையான வயிற்றுவலியால் துடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகிலுள்ள பழனி மற்றும் திண்டுக்கல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.


திண்டுக்கல் : ‘விநோத நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன்’ உயிரை காப்பாற்ற முதல்வருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை..!




ஆனால், மேலும் சிறுவனின் உடல்நிலை முன்னேற்றமடையாததால், மேல் சிகிச்சை செய்ய வேண்டும் என சில மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தங்களிடம் உள்ள நிலம் உட்பட அனைத்தையும் விற்று கடந்த 15 தினங்களுக்கு முன் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சுமார் இலட்ச ரூபாய் வரை செலவு செய்து நவீன பரிசோதனை செய்ததில் அச்சிறுவனுக்கு "வில்சன் காப்பர் என்னும் மர்ம நோயால் கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரத்த சுத்திகரிப்பு செய்தால் சரியாகிவிடும் என்று பல கட்ட சிகிச்சையளித்ததாக கூறப்படுகிறது,




தொடர் சிகிச்சையின் போதே மாணவனின் உடல்நிலை தொடர்ந்து மேலும் மோசம் அடைந்ததை அடுத்து அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் இச்சிறுவனுக்கு இலட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய (வில்சன் காஃபர்) என்னும்  விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளர். இதனால் உடனடியா கல்லீரல் மாற்று அறுவை கிசிச்சை செய்ய வேண்டும், இல்லை என்றால் சிறுவனை காப்பாற்றுவது கடினம் அதனால் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லுங்கள் எனக் கூறி அனுப்பி வைத்துவிட்டனர்.


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கப்படவில்லை - சு.வெங்கடேசன்




ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கியும் எந்த மருத்துவரும் சரியான பதிலை சொல்லாதால் கதறி அழுது கொண்டு வேறுவழியின்றி என்ன செய்வதென்று புரியாமல் தற்போது தங்களது சொந்த ஊருக்கே மகனை அழைத்து வந்து விட்டனர். இந்நிலையில், விநோத நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோர் சார்பாக தமிழக அரசு உதவி செய்ய கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த செய்தி ஏபிபி நாடு செய்தி தளத்தில் வெளியான நிலையில் அதன் எதிரொலியாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையை தொடர்பு கொண்டு சிறுவனின் உடல் நிலை பற்றி கேட்டறிந்தார். பின்பு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பரித்துரைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் . மேலும் சிறுவனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி அளிக்க செய்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார். தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு முதல் கட்ட உடல் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண