திருமங்கலம் அருகே  98- வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய பேரன் பேத்திகள். மேலும் இவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடும் மூதாட்டியின் 105 வயது சகோதரியும்  உடன் இருந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது கிராமத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 


மதுரை திருமங்கலம் அடுத்த கூடக்கோவில் கிராமத்தை சேர்ந்த ராசு - வேலாயி தம்பதியினர் இவர்களுக்கு 6 மகன்களும் 3 மகள்களும் என ஒன்பது பிள்ளைகள். 93 வயதில் ராசு இயற்கை எய்தினார். இந்நிலையில் பிள்ளைகளுடன் வசித்து வரும் வேலாயிக்கு வயது 98 ஆகிறது. 98 வயதான வேலாயி அம்மாளுக்கு அவரது பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகள் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு செய்து கூட கோயிலில் உள்ள வேலாயி இல்லத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை தடபுலராக செய்திருந்தனர் . வேலாயி அம்மாள் தனது மகன், மகன் வழிப்பேரன் ,பேரனின் மகன் ஆகியோர் ஏற்பாட்டின் படி 4 தலைமுறைகள் கண்ட பாட்டி வேலாயி தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். 




வேலாயி அம்மாளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நான்கு தலைமுறை பிள்ளைகள் உடனிருந்து வாழ்த்து பெற்றதோடு கூடுதல் சிறப்பாக  வேலாயியுடன் அவரது சகோதரி கருப்பாயி அம்மாளும் பங்கேற்றது தான். சிறப்புக்கு காரணம் கருப்பாயி அம்மாளுக்கு வயது 105 ஆகிறது . 98 வயது மூதாட்டி பிறந்தநாள் விழாவில் 105 வயதான அவரது சகோதரியும் பங்கேற்று மகன்கள் பேரன் பேத்திகள் என அனைவரையும் வாழ்த்தியது கூடக்கோவில் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: கோயில் திருவிழாவில் மோதல்.. காயம் ஏற்பட்டோருக்கு நிவாரண தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர் !


படிக்க  மிஸ் பண்ணாதீங்க பாஸ் - IND vs AUS WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்.. மைதானத்தில் இரங்கல்.. கருப்புப் பட்டையுடன் களமிறங்கிய இந்தியா & ஆஸ்தி., வீரர்கள்


மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime: மதுரை அருகே ஆடல், பாடல் நிகழ்ச்சியில் இரு பிரிவினர் மோதல் - 4 பேர் காயம், கார், பைக்குகள் சேதம்









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண