கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் நடைபெற்று வரும் 61வது மலர் கண்காட்சியின் இரண்டாவது நாளான இன்று காலை முதலே சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.




திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற மலைகளின் இளவரசி என அழைக்கப்படும், கொடைக்கானலில் வருடந்தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நடைபெறும். இந்த விழாவில் தோட்டக்கலைத்துறை சார்பாகவும், சுற்றுலா துறை சார்பாக மலர் கண்காட்சி நடத்தப்படும். இந்த நிலையில் தற்போது கோடை விழா துவங்கி இரண்டாவது நாளாக மலர் கண்காட்சியுடன் நடைபெற்று வருகிறது. இந்த கோடை விழாவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அவர்களின் பார்வைக்காக 20அடி நீள மயில், 10 அடி உயரம் கொண்ட சேவல், 360 டிகிரி செல்ஃபி பாயின்ட், நெருப்பு கோழி உள்ளிட்ட உருவங்களை பூக்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன,


ABP Nadu Exclusive: அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!


அதே போல பூக்களின் பெயர் பலகைகள், பூ தொட்டிகள், காளை மாடு, பூங்காவில் அலங்கார வளைவு, மலர் அலங்கார மேடை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. நேற்று முதல் துவங்கிய கோடை விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், படகு போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், நாய்கள் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளது.


நீலகிரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: மண் சரிவால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இரத்து




Latest Gold Silver Rate: வீக் எண்டில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு..


தற்போது இரண்டாவது நாளாக நடைபெற்று வரும்  மலர்கண்காட்சி மற்றும் கோடை விழாவில் சுற்றுலாப்பயணிகள் வருகை இன்று காலை முதல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் வார இறுதி விடுமுறை நாட்களான இன்று அதிகமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பிரையன்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் லட்ச கணக்கான மலர்களை கண்டு ரசித்தும், பூங்காவில் வைக்க பட்டுள்ள பூக்களால் உருவாக்க பட்ட உருவ அமைப்புகளை ரசித்து வருகின்றனர். மேலும் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் இதனை ரசித்து மகிழ்ந்து வருகின்றனர். மலர்கண்காட்சி நேற்று தொடங்கியது நிலையில் நேற்று மட்டும் ஒரே நாளில் 5950 பேர் பார்வையிட்ட நிலையில் இன்று சுற்றுலாப்பயணிகள் வருகை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.