சாமி சிலைகளை திருடியதால் கெட்ட கனவுகள் வந்ததை தொடர்ந்து, மீண்டும் சிலைகளை கோயிலில் திருடர்கள் வைத்துச்சென்ற அரியச் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.


திருட்டுக்குப் பிறகு திருடர்கள் பொருட்களைத் திருப்பித் தருவது போன்ற செய்திகளை நாம் அரிதாகவே கேள்விப்படுகிறோம். ஆனால் உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த மாநிலத்தில் சித்ரகூடில் உள்ள தரௌன்ஹாவில் உள்ள பழமையான பாலாஜி கோயிலில் இருந்து சிலைகளை திருடிய சில நாட்களுக்குப் பிறகு, திருடர்கள் 14 சிலைகளை பூசாரியிடம் திருப்பிக் கொடுத்துள்ளனர். கோயில் பூசாரிக்கு எழுதிய கடிதத்தில், திருடர்கள் இரவில் பயமுறுத்தும் கனவு காண்பதாகவும், பயத்தின் காரணமாக அவர்கள் சிலைகளைத் திருப்பி அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Crime: ட்யூஷன் எடுக்கவந்த ஆசிரியைக்கு பாலியல் வன்கொடுமை.. மருத்துவரால் நேர்ந்த கொடூரம்.. பகீர்..


சிலைகளை திருடிய பிறகு தங்களுக்கு கனவுகள் இருப்பதாக திருடர்கள் கடிதத்தில் கூறியுள்ளனர். அதனால்தான் திருடர்கள் சிலைகளைத் திருப்பித் தர முடிவு செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. “தரான்ஹாவில் உள்ள பழமையான பாலாஜி கோயிலில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 16  சிலைகள் கடந்த மே 9ஆம் தேதி திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பூசாரி மஹந்த் ராம்பாலக் அடையாளம் தெரியாத திருடர்கள் மீது புகார் கொடுத்துள்ளார்” என்று சதர் கோட்வாலி கார்வியின் நிலைய அதிகாரி ராஜீவ் குமார் சிங் கூறினார். 


திருடப்பட்ட 16 சிலைகளில், 14 சிலைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மஹந்த் ராம்பாலக்கின் குடியிருப்பு அருகே சாக்கு மூட்டையில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டன. அதனால் பயத்தின் காரணமாக சிலைகளை திருப்பி அனுப்பியுள்ளனர். தற்போது 14 சிலைகளும் கோட்வாலியில் வைக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க: Crime : ”கையில காசில்லை..” : ட்ரம்மில் தாயின் உடலை போட்டு சிமெண்ட்டை வைத்து பூசிய மகன்.. சென்னையில் பகீர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண