உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள காசியாபாத். இந்த பகுதியில் கூலித்தொழில் செய்து வரும் ஒருவர் தனது மனைவி மற்றும் சிறு வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்களது மகளை அழைத்துக்கொண்டு முசாபர்நகரில் உள்ள தங்களது உறவினர்களை பார்க்க கடந்த செவ்வாய்கிழமையன்று சென்றுள்ளனர்.


பின்னர், அங்கேயே தங்களது மகளை விட்டுவிட்டு அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்களது மற்றொரு உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். தாயும், தந்தையும் விட்டுச்சென்றதால் அந்த சிறு வயது மகள் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளார். இதையடுத்து, அவரது உறவினர்கள் தம்பதியினரை தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு அவர்களது மகள் தொடர்ந்து அழுதுகொண்டு இருப்பதாகவும், உடனே திரும்ப வருமாறும் கூறியுள்ளனர்.




இதையடுத்து, டாக்சி ஒன்றை பிடித்து கணவன் மனைவி இருவரும் தங்களது மகளை பார்ப்பதற்காக மீண்டும் தங்களது உறவினர் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். ஆனால், வரும் வழியில் சாலையில் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் அவர்களை பாதி வழியிலே அந்த டாக்சி ஓட்டுநர் இறக்கிவிட்டுள்ளார். இதனால், கணவன் மனைவி இருவரும் நடந்தே வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.


அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று இவர்கள் இருவரையும் தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர். இதனால், கணவன் மனைவி இருவரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனாலும், அந்த கும்பல் அருகில் ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு இவர்களை இழுத்துச்சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களில் நான்கு பேர் அந்த பெண்ணை அவரது கணவர் கண்முன்னே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதைத்தடுக்க முயன்ற அவரது கணவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.




பின்னர், காயங்களுடன் தம்பதிகள் இருவரும் தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களை கண்டு அவர்களது உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், நடந்தவற்றை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்களது உறவினர்கள் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த குற்றத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தனியாக சென்ற பெண்ணை அவரது கணவர் முன்னே தாக்கி ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க : RRR Review: பாகுபலிக்கு டஃப் கொடுக்கிறதா ஆர்.ஆர்.ஆர்? எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்தாரா ராஜமெளலி..? எப்படி இருக்கு ஆர்.ஆர்.ஆர்?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண