• Rahul Gandhi: லடாக் மக்களின் குரல் நசுக்கப்படுகிறது.. பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் ..ராகுல் காந்தி உறுதி


முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 19ஆம் தேதி, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு பைக்கில் ட்ரீப் சென்றார். கடந்த ஒரு வாரமாக, லடாக்கில் தங்கி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், லடாக் மக்கள் குறித்து இன்று பேசிய ராகுல் காந்தி, அவர்களின் குரல் நசுக்கப்படுவதாகவும் லடாக் மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.